WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

சனி, 17 டிசம்பர், 2011

இந்தியச் செய்திகள்


மத்திய அரசை அவர்கள் இருவரும் தாக்கிய பேசியது காங்கிரஸ் தலைவர்களுக்கு கூட்டணி முறிவு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் தனித்து விடப்பட்டது போல, வரும் லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் கட��...
14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு தொகையை முதலீடு செய்த பின், அந்த திட்டத்தை கிடப்பில் போட முடியாது. அந்த மின் நிலையத்தை செயல்படாமல் வைத்திருக்க முடியாது.
உலக விண்வெளிக் கவுன்சில் ஒன்றை அமைக்க வேண்டும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தெரிவித்தார். இதன் மூலம் பிற நாடுகளின் வானியல் நடவடிக்கைளை மேற்பார்வையிட முடியும். இத்தகைய கவுன்சில் ��...
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு கேரள அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
10 கணக்குகள் மூலம் தீவிரவாதிகளுக்கு பணம் கைமாறி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2009 முதல் 2010 வரை 5 தடவையும் 2010 முதல் 2011 வரை 4 தடவையும் சமீபத்தில் ஒரு தடவையும் பங்கு சந்தை பண மாற்றம் மூலம் தீவிரவாதிகள் பணம் �...
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தாய் காயத்ரி தேவி இன்று காலமானார். அவருக்கு வயது 81. மறைந்த காயத்ரி தேவிக்கு ஒரு மகளும், மூன்று மகன்களும் உள்ளனர்.
2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் அறிவுறுத்தல்படியே, முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா செயல்பட்டதாக, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்�...
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு எதிராக கேரளாவின் திருச்சூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றம், ஜாமீனில் வெளிவரக் கூடிய, கைது உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக தற்போது தமிழகத்தில் அறவழியில் போராடினாலும் தமிழர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது வேதனை அளிக்கிறது.
பைக் ரேஸ் மட்டும் அல்ல, ஆட்டோ ரேஸும் சென்னையில் நடக்கிறது. ஆர்யா, பூஜா நடிப்பில் வெளிவந்த 'ஓரம்போ’ படத்தைப் போலவே நண்பனுடன், காதலியுடன், மனைவியுடன் எனப் பல பிரிவுகளில் நடக்கும் பைக், ஆட்டோ ரேஸ், பெரும்பாலு�...

பிரபலமான செய்திகள்


நாட்டு நடப்பு....!!!


நாட்டு நடப்பு....!!!

என்மீது சுமத்தபட்ட குற்றசாட்டுகள் அடிப்படை ஆதரமற்றது
ப.சிதம்பரம்//



அண்ணே பயப்படாதீங்க அண்ணே, துணைக்கு ராசா உள்ளேதானே இருக்கார், கேன்டீன்ல சப்பாத்தி பாஜி எல்லாம் சூப்பரா இருக்காம். கனிமொழி அக்கா சொன்னாங்க...!!!
--------------------------------------------------------------------------------------------------------------------------------

தங்கம் விலை இன்றும் பவுனுக்கு ரூ.448 குறைந்தது: 2 நாளில் ரூ.1000 சரிவு//

இனி கண்ணாடி வளையல், பிளாஸ்டிக் மாலைகளுக்கு டிமாண்ட் குறையுமே...?
--------------------------------------------------------------------------------------------------------------------------------

பிரதமர் அறிவிப்பு கூடங்குளம்: முதல் அணுஉலை ஓரிரு வாரத்தில் செயல்படத் தொடங்கும்//

ஆஹா முல்லைப்பெரியார் பிரச்சினையை கண்டுக்காமல் இருந்துட்டு, ரஷ்யா போயி உங்க சிங்கிடி வேலையை சிரமமா செய்த உங்க நேர்மை பிடிச்சிருக்கு...!!!
--------------------------------------------------------------------------------------------------------------------------------

தேனி மக்களுக்கு தலை வணங்குகிறேன், 

அகதிகளாக தமிழகம் நோக்கி வருபவர்களை " தேவாரம் " பகுதி மக்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து , வறுமையின் பிடியில் தாங்கள் உள்ள போதும் ,

வீட்டிற்கு ஒருவர் தங்களால் முடிந்த ஒரு பொருளை தந்து, 

அவர்களுக்கு உணவு தயாரித்து,

அவர்களுக்கான மருத்துவ உதவிகள் செய்து ,

அவர்களுக்கு ஆறுதல் கூறுவதை

செய்தியில் பார்க்கும் போது கண்கள் கலங்குகின்றது !!!!!

--செல்வகுமார்.
---------------------------------------------------------------------------------------------------------------

கம்பத்தில் அரசியல்வாதிகள் நடத்துற போராட்டத்தைப்! பாத்தா ஒரே காமெடியா இருக்கு.

------புலவர் தங்கமணி-----
---------------------------------------------------------------------------------------------------------------

பிரதமர் ஆனவன் கூட இவ்வளவு சந்தோச பட்ருக்க மாட்டான்..
#ஜன்னல் சீட் பிடிச்சுட்டேனுங்க பஸ்ல..

------சாரதி சாரதி------

சரியான உள்குத்தா இருக்கே....!!!
-----------------------------------------------------------------------------------------------------------------

கேரளாவில் தாக்குதல் எதிரொலி: சென்னை கோவிலில் விரதத்தை முடிக்கும் அய்யப்ப பக்தர்கள்//


சிபி அப்பமே சொன்னான் போகாதீங்கன்னு கேட்டாதானே...!!!
-----------------------------------------------------------------------------------------------------------------

நமக்கு இங்கிலீஷ் ல டவுட் இருந்த டீச்சர் கிட்ட கேட்கலாம்............ டீச்சருக்கே டவுட்டா இருந்தா...............????

-------கே ஆர் விஜயன்-------

எந்த டீச்சர் வந்து டவுட்டு கேட்டாங்க, இதான் நான் அப்பமே சொன்னேன் லேடீஸ் காலேஜ் பக்கம் ஆபீஸ் வேண்டாமுன்னு ம்ம்ம்ம்...!!!
--------------------------------------------------------------------------------------------------------------------

சிதம்பரம் அண்ணாச்சியின் டவுசர் ஸாரி பதவி டமால் டிமால் ஆகப்போகுது....!!!
--------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைக்கு ஒரு இத்தாலி, நாளைக்கு ஒரு கொலாம்பியா'காரி, ம்ம்ம் இவங்க டேஸ்ட் கொஞ்சம் டிஃப்றேன்டாதான் இருக்கு....!!!!!!
--------------------------------------------------------------------------------------------------------------------

3 வது நாளாக அகதிகளாக வருகை: கேரளாவில் இருந்து 170 தமிழ் குடும்பங்கள் விரட்டியடிப்பு: தப்பி வந்தவர்கள் கண்ணீர் பேட்டி...!!!
--------------------------------------------------------------------------------------------------------------------

காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் இருக்கும் அத்தனை பேரிடமும் உள்ள சொத்து கணக்கை கண்டுபிடித்து, கள்ளப்பணத்தை பறிமுதல் செய்ய மக்களிடையே ஒரு குழு அமைத்தால் என்ன...???
------------------------------------------------------------------------------------------------------------------

சட்டசபை தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு, முல்லைப் பெரியாறு பிரச்னையில், சுணக்கம் காட்டுகிறது.//

ஹா ஹா ஹா ஹா அண்ணே மெதுவா சொல்லுங்க அண்ணே, அக்காளை மறுபடியும் பிடிச்சு உள்ளே தூக்கிப்போட்டுறப் போறாயிங்க...!!!
-------------------------------------------------------------------------------------------------------------------

சென்னை: ""கேரளாவில், தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறையை கட்டுப்படுத்த, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தலையிட வேண்டும்,'' என தி.மு.க., தலைவர் கருணாநிதி, அவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.//

ஹா ஹா ஹா ஹா நாடகம் அரங்கேறும் உச்சகாட்சி நடக்குதைய்யா, அடப்பாவி, மத்திய அரசுகிட்டே சொன்னா என்னவாம், இல்லைன்னா நீங்க உண்மையான தமிழனா இருந்தா காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி காட்டுங்க, போங்கய்யா போங்க உங்களைப்பற்றி மக்களுக்கு நல்லாவே தெரியும்...!!!
-------------------------------------------------------------------------------------------------------------------

தமிழனுக்கு தண்ணி வழங்குனோம், தண்ணி வழங்குனோம்"னு நாடெல்லாம் சொல்லும் கேரள பெருமக்களே! நாங்கதான்டா உங்களுக்கு மொழியவே வழங்குனோம்!!!//

-----------டான் அசோக்--------

எத்தனை அழகான நடிகைகளை தந்துருக்காங்க மறந்துட்டியாய்யா...!!!
-------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மலையாளி நடிகைகளும் உடனே தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.....!!!

--------நாஞ்சில்மனோ அறிக்கை---------

சிபி : நாயே நாயே நீ உருப்படுவியா, இவிங்களை வச்சிதானேடா நான் பிளாக் நடத்திட்டு இருக்கேன் அதுல மண்ணை அள்ளிப்போடுறே ராஸ்கல்...!!!
------------------------------------------------------------------------------------------------------------------

மலையூர் மம்பட்டியான் அபார வெற்றி, அதைத்தொடர்ந்து, தியாகராஜன் நடித்த "கொம்பெறிமூக்கன்" ரீமேக் செய்யப்படுகிறது ஒடுங்கலேய் ஒடுங்கலேய்.....!!!
------------------------------------------------------------------------------------------------------------------

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்று, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு ஏதுவாக, கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு திருத்தச் சட்டத்தில் உரிய திருத்தங்களை கேரள அரசு மேற்கொள்ள வேண்டும், எந்த சூழ்நிலையிலும், தமிழகம் தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது,'' என்று முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம், ஒருமனதாக தமிழக சட்டசபையின் நிறைவேற்றப்பட்டது.// 

உங்கள் தீர்மானம் பேப்பர் அளவில்தானே மேடம் இருக்கு அமல்படுத்துறது யாராம்...???
------------------------------------------------------------------------------------------------------------------

லக்னோ: உ.பி., மாநில சட்டசபை தேர்தல் வருவதை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ராகுல் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல், மாயாவதி சாதாரண மக்களின் பிரச்னையை புரிந்து கொள்ளவில்லை என கூறினார்.

--------மண்ணை கவ்வ வாழ்த்துக்கள் சார்--------
------------------------------------------------------------------------------------------------------------------

தாய்த்தமிழை இகழ்வோர் முகத்தில் உமிழ் !!!!

------வாலி------
------------------------------------------------------------------------------------------------------------------

நகைச்சுவை என்றால் சிரிக்க மட்டும் அல்ல சிந்திக்கவும் என்று உணர வைத்தவர். தமிழ் சினிமா மறந்த "நாகர்கோவில் சுடலையாண்டி கிருஷ்ணன்" 

-----------பிரபு கிருஷ்ணா-------
------------------------------------------------------------------------------------------------------------------

கேரளத்தில் பன்நெடுங்காலமாக வாழ்பவர்களையே அவர்கள் அகதிகளாக அடித்துவிரட்டும்போது. இங்கே பஞ்சம் பிழைக்க வந்தவர்களை நாம் ஏன் இன்னும் கொஞ்சி குலவ வேண்டும்...???

------கவிமதி-------
-----------------------------------------------------------------------------------------------------------------

கருணாநிதி, ஜனாதிபதிக்கும், சோனியாவுக்கும், பிரதமருக்கும் தமிழர்கள் கேரளாவில் தாக்கபடுவதை தடுக்க கோரி இவர்களுக்கு பேக்ஸ் அனுப்பி இருக்கிறாராம். - பத்திரிகை செய்தி#

 இவ்வளவு நாளா புறா மூலமும் , போஸ்ட் மேன் மூலமும்தானே கடித போக்குவரத்தது நடந்தது. இப்போது பேக்ஸ் முலம். கலைஞர் நல்ல முன்னேற்றமாகத்தான் இருக்காருங்கோ.. இவர் எப்போது இமெயிலுக்கு வரப்போகிறாரோ...?

இவர் எதை எழுதி அனுப்பினாலும் எருமாடு மேல மழை பெய்ச்சதுபோலத்தான். சுரணை இல்லமால் இருக்குங்க...தமிழன்தான் தன உயிரை பாதுகாத்து கொள்ளவேண்டும்.

-------ஆர் கே குரு-------

இந்திய செய்திகள்


இந்திய செய்திகள்

உயிரோடு விளையாட்டு! நடுங்கவைக்கும் பைக் ரேஸ்!!(படங்கள் இணைப்பு) உயிரோடு விளையாட்டு! நடுங்கவைக்கும் பைக் ரேஸ்!!(படங்கள் இணைப்பு)
சனி, ஞாயிறுகளில் சென்னைக் கடற்கரைச் சாலைகளில் பயணிப்பவர்கள், 'விர்ர்ர்ரூம்... விர்ர்ர்ரூம்’ என்று அதிவேகத்தில் சீறிப் பறந்து, பலரின் உயிரோடு....................
மேற்கு வங்கத்தில் கள்ளச்சாராய பலி 150 ஆக உயர்ந்தது!! மேற்கு வங்கத்தில் கள்ளச்சாராய பலி 150 ஆக உயர்ந்தது!!
மேற்கு வங்காளத்தில் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மோக்ராஹட் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.................
கூடங்குளம் அணுஉலை வெடித்துவிடும் என்று பயத்தை உருவாக்கி மக்களை ஏமாற்றுகின்றனர்!! கூடங்குளம் அணுஉலை வெடித்துவிடும் என்று பயத்தை உருவாக்கி மக்களை ஏமாற்றுகின்றனர்!!
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த 4 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்...............
உலகம் அழிந்து ஒருகோடி மக்களே மிஞ்சுவர் -அதிர்ச்சி தகவல்கள்(வீடியோ இணைப்பு) உலகம் அழிந்து ஒருகோடி மக்களே மிஞ்சுவர் -அதிர்ச்சி தகவல்கள்(வீடியோ இணைப்பு)
இந்தியா இரண்டு துண்டாகி இரு தீவாகும் .ஒருகோடி மக்கள்தான் தப்பிபார்கள் . சுனாமி .நிலநடுக்கம் .மக்களை அச்சுறுத்தும் பேரழிவு பேரிடியாக வருகிறது . பிரம்மரிசி....................
தவறான மருந்து கொடுத்த இந்திய டாக்டர் மீது வழக்கு!! தவறான மருந்து கொடுத்த இந்திய டாக்டர் மீது வழக்கு!!
எய்ட்ஸ் நோய் இல்லாதவர்களுக்கும், அது தொடர்பான மருந்து கொடுத்த இந்திய டாக்டர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவின் மன்ஹாட்டன் மாவட்டத்தில்.............
கொல்கத்தா மருத்துவமனையில் தீ விபத்து! 73பேர் பலி! (2ஆம் இணைப்பு-வீடியோ இணைப்பு) கொல்கத்தா மருத்துவமனையில் தீ விபத்து! 73பேர் பலி! (2ஆம் இணைப்பு-வீடியோ இணைப்பு)
கொல்கத்தா மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துவிட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின்னர் 40 பேரின் உடல்கள் உரியவர்களிடம்...............
கொல்கத்தா மருத்துவமனை தீ விபத்தில் பலியானோர் தொகை 60ஆக அதிகரிப்பு!!   (படங்கள் இணைப்பு) கொல்கத்தா மருத்துவமனை தீ விபத்தில் பலியானோர் தொகை 60ஆக அதிகரிப்பு!! (படங்கள் இணைப்பு)
இந்தியாவின் கொல்கத்தாவில் அமைந்துள்ள 'அம்ரி' (ஏ.எம்.ஆர்.ஐ.) மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தினால் பலியானோரின் எண்ணிக்கை.............
வேறு ஆணுடன் மனைவி வீட்டில் உல்லாசம்! நேரில் பார்த்த கணவன் மனைவியைக் கொன்று தானும் தற்கொலை!! வேறு ஆணுடன் மனைவி வீட்டில் உல்லாசம்! நேரில் பார்த்த கணவன் மனைவியைக் கொன்று தானும் தற்கொலை!!
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை கொன்று கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொல்லிமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.............
சபரிமலைக்கு வழிபாட்டுக்காகச் சென்ற வான் விபத்துக்குள்ளாகியதில் 7 பேர் பலி!! சபரிமலைக்கு வழிபாட்டுக்காகச் சென்ற வான் விபத்துக்குள்ளாகியதில் 7 பேர் பலி!!
சபரிமலைக்கு வழிபாட்டுக்காக சென்றவேளை பஸ்ஸூம் வானும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 7 பேர் பலியாகியுள்ளனர்.கோவையில் இருந்து சேலம் வழியாக பெங்களூர் சென்ற.................
மகனுடன் சேர்ந்து மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்! மகனுடன் சேர்ந்து மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்!
கள்ளக்காதல் விவகாரம் காரணமாக 47 வயதுடைய பெண் ஒரவரை அவரது கணவனும் மகனும் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர்............
2 வயது குழந்தையின் நாக்கை அறுத்து சிகரெட்டால் சூடு போட்ட தந்தை!! (பட இணைப்பு) 2 வயது குழந்தையின் நாக்கை அறுத்து சிகரெட்டால் சூடு போட்ட தந்தை!! (பட இணைப்பு)
மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக 2 வயது குழந்தையின் நாக்கை அறுத்து, உடம்பெல்லாம் சிகரெட்டால் சூடு போட்டுள்ளார் ஒரு கொடூரமான தந்தை...................
கடன் தொல்லையால் டாக்டர் குடும்பத்தோடு தற்கொலை!! கடன் தொல்லையால் டாக்டர் குடும்பத்தோடு தற்கொலை!!
பெங்களூரில் டாக்டர் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.பெங்களூர் சாம்ராஜ்பேட்டை வால்மீகி நகரில் வசித்து வந்தவர், டாக்டர் அமானுல்லா................
கல்லூரி பஸ் - பைக் மோதல்: பஸ் தலைகீழாக கவிழ்ந்து 40 மாணவ-மாணவிகள் காயம்! கல்லூரி பஸ் - பைக் மோதல்: பஸ் தலைகீழாக கவிழ்ந்து 40 மாணவ-மாணவிகள் காயம்!
தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பஸ் கவிழ்ந்ததில் 40 மாணவ-மாணவிகள் படுகாயம் அடைந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த ஊழியர் பலியானார்..............
நித்தியானந்தாவின் புதிய காம லீலை பிரஸ்! – Comedy Show (வீடியோ இணைப்பு) நித்தியானந்தாவின் புதிய காம லீலை பிரஸ்! – Comedy Show (வீடியோ இணைப்பு)
வீடியோவில் நித்தியானந்தாவின் காம ரச விளக்கங்களை கண்டு சிரியுங்கள்.....
நாக்கை அறுத்து மார்பை பிளந்து ரவுடி கொலை!! (பட இணைப்பு) நாக்கை அறுத்து மார்பை பிளந்து ரவுடி கொலை!! (பட இணைப்பு)
சேலத்தில் ரவுடியின் நாக்கை அறுத்து, மார்பை பிளந்து கல்லைக் கட்டி கிணற்றில் சடலத்தை மர்ம நபர்கள் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம்.................
previous123456789...2627next

38வயதிற்கு உட்பட்ட “தாய்“மார்களுக்கு மட்டும்


38வயதிற்கு உட்பட்ட “தாய்“மார்களுக்கு மட்டும்




குழந்தை உற்பத்திக்கலனாகப் பெண் மட்டுமே கருதப்படுகின்றாள்.

குழந்தைப்பேறைத் தள்ளிப்போடுவது, தடைசெய்வது என்ற சிந்தனைவரும்போது அது பெண்ணின் வழியாகவே நிறைவேற்றப்படுகின்றன.

சான்றுகளாகப் பெண்ணுறை (Female Condom), காப்பர் டீ, மற்றும் பல கருத்தடை மாத்திரைகைள். 

இதனால் பெண்களுக்குப் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. அவ்விளைவுகள் காலம்முழுதும் தொடர்கின்றன.

ஆனால் இதற்குமாறாக இவற்றைப் பயன்படுத்துவதால் எத்தகைய பின்விளைவும் ஏற்படாது என்று http://medicalonline.in/details.php?msg=article&aname=Orthopedic%20Surgery&catid=24 பல்வேறு மாற்றுக்கருத்துக்கள் இருப்பினும் அவை அத்தனையும் வணிகம்நோக்கம் கொண்டவை என்பதனைப் பெண்கள் உணரவேண்டும்.

இவற்றிற்கு எதிராப் பெண்கள் குரல் எழுப்பவேண்டும்.

குழந்தைப்பேறைத் தள்ளிப்போடுவது, தடைசெய்வது என்ற சிந்தனைவரும்போது அவற்றை ஆண்களின் வழியாக நிறைவேற்றுவதுதானே நியாயமானது!?

ஆதலால்,  வாழ்வை ஆணுறையோடு ஆனந்தமாகக் கொண்டாடுவோம். பெண்களுக்குக் குறைந்த பட்சம் இதிலாவது சற்று விடுதலைதருவோமே!  

ஆஆஆத்தாடி எம்மாம்ம்ம் பெரீரீரீய பள்ளம்!!!




உலகில் உள்ள மிகப்பெரிய பள்ளம் உங்கள் பார்வைக்கு. ஆனால் இவற்றைவிடப் பெண்களின் மனது ஆழமானது.உங்களுக்குக் கல்யாணமாகியிருந்தால் புரியும்!?

தென்னை தரும் தொழில்கள்


தென்னை தரும் தொழில்கள்

தென்னை மரங்கள் வளர்ப்பில் கேரள மாநிலம் முதல் இடத்தை பெற்றுள்ளது.  தொன்னையின் மூலமாக பல்வேறு பொருட்களை நாம் தயாரிக்கலாம்.  தேங்காய், இளநீர் ஆகியவற்றில் இருந்து பல புதிய பொருட்களை பெறமுடியும்.  அதன் மூலம் புதிய தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கமுடியும்.

நாட்டுக்கு அன்னிய செலாவணியை ஈட்டித்திரும் வகையில் பல புதிய தொழில் நுட்பங்களை தென்னை வளர்ச்சி வாரியம் கண்டுபிடித்து உள்ளது.

தேங்காய் தண்ணீரின் பயன்கள்:-

கேரளாவில் தேங்காய் தொடர்பான தொழிலின்போது சுமார் 25 கோடி லிட்டர் தேங்காய் தண்ணீர் வீணாகிறது.

தேங்காய் தண்ணீரில் 5.4 சதவீதம் திடப்பொருளும், 2.0 சதவீதம் சர்க்கரையும், 0.5 சதவீதம் தாதுஉப்பும், தலா 0.1 சதவீதம் புரதம் மற்றும் கொழுப்பும் உள்ளது.  வீணாக்கப்படும் தேங்காய் தண்ணீரை சேமித்து பல்வேறு வகையில் பதப்படுத்தி இளநீரில் இருக்கும் தன்மையை மாற்றி கண்ணாடி பாட்டில்கள், பாலிதீன் பைகளில் அடைந்து விற்பனை முறைபற்றியும் அதுபற்றிய தொழில் நுட்பத்தையும் திருவனந்தபுரத்தில் இருந்து இயங்கும் தேங்காய் பொருள் ஆராய்ச்சிக்கூடம் கண்டுபிடித்து உள்ளது.

இன்று ஊறுகாய் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களை பதப்படுத்துவதற்கு அசிட்டிக் ஆசிட் என்ற அமிலத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட வினிகரையே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்.  இதற்கு மாறாக தேங்காய் தண்ணீரில் இருந்து தயாரிக்கப்படுகிற வினிகர் இயற்கை தன்மையுடன் இருப்பதால் இத்தகைய வினிகருக்கு மேலைநாடுகளில் நல்ல வரேற்பு இருக்கிறது.  உள்நாட்டிலும் வளமான எதிர்காலம் உள்ளது.

தேங்காய் தண்ணீரில் சர்க்கரை மற்றும் அசிட்டிக் அமிலம் ஆகியவற்றை கலந்து அன்னாசிப்பழ சக்கையையும் சேர்த்து வளர்ப்பு முறையில் ஜெல்லி தயாரிக்கலாம்.

இதை கண்ணாடி ஜாடிகளில் 2 அல்லது 3 வாரங்கள் வைத்திருந்து வளர்த்து அதன் பிறகு பல்வேறு முறைகளில் பக்குவப்படுத்தி துண்டுகளாக்கி விற்பனை செய்யலாம்.  இந்த ஜெல்லி பனை நுங்குபோல் ஒருவித குளிர்ச்சியும், மென்மையான சுவையையும் உடைய தின்பண்டமாகும்.  இதேபோல் பர்பி, அல்வா போன்றவற்றையும் தயாரிக்க முடியும்.

தேங்காய் பால் பவுடர் :-

இன்றைய உணவு தயாரிப்பில் தேங்காயின் பங்கு அளப்பரியது.  இன்றைய வேகமான உலகில் சமையலுக்கு தேங்காய் பால் எடுப்பது என்பது நேரம் எடுக்கும் வேலையாக இருக்கிறது.

இதுபோன்றவர்களுக்கு தேங்காய் பாலை பிழிந்து அதனை பக்குவப்படுத்தி பவுடராக டின்களிலும், பாலிதீன் பைகளிலும் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.

என்ன நண்பர்களே! தேங்காயில் இருந்து இவ்வளவு பொருட்களை தயாரிக்க முடியுமா என்று எண்ணுகிறீர்களா, இதுமட்டுமல்ல இன்னும் ஏராளமான தின்பண்டங்களையும், தேங்காய் ஓட்டில் இருந்து பல்வேறு கலைப்பொருட்களையும் உற்பத்தி செய்து லாபம் சம்பாதிக்க முடியும்.
Labels:

தேனீ வளர்ப்பு!! (bees make)


தேனீ வளர்ப்பு!! (bees make)

தேனில் (honey) சுவை அதிகமாக இருப்பதோடு, அதில் பல்வேறு மருத்துவ குணங்களும் உள்ளன.  உடல் பருமனை குறைக்க, மெலிந்து இருப்பவர்கள் குண்டாக, குரல் வளம் சிறக்க, நோய் நொடி அண்டாமல் இருக்க என தேனில் (honey) இருந்து கிடைக்கும் பயன்களை கணக்கிட முடியாது.  இதனால் தேனின் விலையும் மற்ற பொருட்களின் விலையை விட சற்று அதிகம்தான்.  இந்த தேனீயை (bees) வளர்த்து விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்.

விவசாயிகள் மட்டுமல்லாது மாணவர்கள் (students), இளைஞர்கள் (youth), சுயதவிக்குழுக்கள், ஓய்வு பெற்றவர்கள் என அனைவரும் தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம்.

இதற்கு தேனெடுக்கும் கருவி, புகைப்பான், முகமூடி தலைக்கவசம், கத்தி, ஸ்டாண்ட், கையுறைகள் போன்றவைதான் உபகரணங்கள்.  தேன் பெட்டிகளை மரத்தில்தான் செய்யவேண்டும்.  குறிப்பாக புன்னை மரத்தில் செய்வது மிகவும் நல்லது.

மரத்தில் தேனீக்கள் வட்ட வடிவிலும், பலாப்பழம் போல நீள்வட்ட வடிவிலும் அடை வைக்கும்.  அடையில் உள்ள கூட்டு அறைகள் அறுங்கோண வடிவில் செய்யப்பட்டிருக்கும்.  தேன் வழிந்துவிடாதபடி, சற்று மேல்நோக்கி இருக்கும்.  காலனி பிரிக்கும் போது நாமே நெடிமேடாக அடை வடிவமைப்பை பயன்படுத்தலாம்.  அதன்மூலம் தேனீக்கள் (honey bees) விரைவாக கூடு மற்றும் அடை வைக்கும்.  தேன் கூட்டில் ஒரு ராணித்தேனீ, பல ஆயிரம் பணித் தேனீக்கள், ஆண் தேனீக்கள் என மூன்று பிரிவுகள் இருக்கும்.  மூன்றுக்குமே தனித்தனி வேலைகள் உள்ளன.  

வாரத்திற்கு ஒரு முறை தேன் (honey) கூட்டை திறந்து பார்க்க வேண்டும்.  இதன்மூலம் தேன் சேகரமாகி உள்ளதை அறிந்துகொள்ள உதவும்.  முடிந்தால் தினமும் ஒன்பது மணிக்கு மேல் கவனித்து வரவும்.  மழை மற்றும் மூடுபனி நேரங்களில் கூட்டைத் திறக்கக்கூடாது.  மழைக் காலங்களில் மாலை 6 மணிக்கு மேல் சர்க்கரை, குளுகோஸ் கலந்த தண்ணீரை தேனீக்கு உணவாக தேங்காய் மூடியில் கலக்கி வைக்க வேண்டும்.  எறும்பு, பல்லி, சிலந்தி போன்றவை தேனீக்களின் எதிரி, எனவே அவை தாக்காதபடி பெட்டிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.  இவ்வாறு செய்வதன் மூலம் தேனீ வளர்ப்பில் அதிக லாபம் கிடைத்து வளர்ப்பவர்கள் வாழ்க்கையும் இனிக்கும்.
Labels:

தொந்தி குறைய உடற்பயிற்சி முறைகள்


தொந்தி குறைய உடற்பயிற்சி முறைகள்

திவுலகில் உள்ள சகோதரர்கள் சகோதரிகள் நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த பிறருக்கு பயனளிக்கக்கூடிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள்.
உதாரணத்திற்கு சமையல் கலை, கைவினை, இயற்கை மருத்துவம் போன்றவற்றை சொல்லலாம். சரி நானும் எனக்கு தெரிந்த கலைகளை பகிர்ந்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த பதிவு இடுகிறேன்.(வெளக்கம் போதுமா)

சரி எனக்கு என்ன தெரியும்? நான் ஒரு உடற்பயிற்சி இயக்க வல்லுனர்
நோய் தீர்க்கும் உடற்பயிற்சி முறைகளை செயல் ரீதியாக கற்று இருக்கிறேன் இங்கு சவூதியிலும் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன் இரும்பு கருவிகளை பயன்படுத்தாமல் ஆனால் அதைவிட அதிக பலன்கள் தரக்கூடிய பக்க விளைவுகளை எற்ப்படுத்தாத மைதான விளையாட்டு முறையிலான(Athletics exercise)வற்றை சொல்லி கொடுக்கிறேன். அப்புறம் சிலம்பாட்டம், களரி, போன்ற மண்சார்ந்த கலைகளும் தெரியும் .சர்க்கரை நோயளிகளுக்கான உடற்பயிற்சி முறைகள், இருதய நோயளிகளுக்கான உடற்பயிற்சி முறைகள் என்று பல வகை இருந்தாலும் நான் இந்த பதிவில் சொல்லி கொடுக்க போவது தொந்தியை குறைக்க செய்யவேண்டிய உடற்பயிற்சி முறைகள் மட்டும். இந்த கிரவுண்ட் எக்ஸர்சைஸ் முறையில் ஒவ்வொரு உறுப்புகளையும் தனிதனியாக இயக்கலாம் வயிறை குறைக்க மட்டும் 35 வகையான பயிற்சி முறைகள் இருக்கின்றன அதில் இரண்டை மட்டும் இந்த பதிவில் பார்ப்போம்.


இந்த பயிற்சியை செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

1.முதலில் இந்த பயிற்சிகளின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்
ஏனோ தானோ என்று செய்தால் பலன் கிடைக்காது.

2.விடா முயற்சியோடு பயிற்சிகளை மேற்க் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சி சிலருக்கு உடனே பழகிக் கொள்ள முடியாது; கொஞ்ச கால தாமதம் ஆகும். அதற்காக மனம் தளரவோ,இது நமக்கு வராது என்று ஒதுக்கி விடவோ கூடாது.

3.தகுந்த சூழ்நிலை அவசியம் இயற்கை காற்றோட்ட வசதி வேண்டும் வீட்டில் ஜன்னலை திறந்து வைத்துக் கொள்ளுங்கள்

4.பயிற்சியின் போது மூக்கின் வழியாக மட்டுமே சுவாசிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாயினால் சுவாசிக்கக் கூடாது. மூச்சை உள்ளுக்கிழுத்தாலும் வெளியே விடுதலும் ஒரே சீராக மெதுவாக ,நிதானமாக நடைபெற வேண்டும்.

புதிதாகப் பயிற்சி செய்வோருக்கு

1.ஆரம்பத்தில் சில நாட்களுக்கு உடல்வலி இருக்கும். அதனை பெரிதுபடுத்தக் கூடாது.அதற்காக பயிற்சி செய்வதையே நிறுத்தி விடக்கூடாது.

2.பயிற்சிகளின் போது கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம்
சாப்பிட்ட உடன் பயிற்சிகளை ஒரு போதும் செய்யக் கூடாது இந்த பயிற்சிக்கு வயிறு காலியாக இருக்க வேண்டும்.

3.பயிற்சி முடிந்த உடனேயும் உணவு உட்கொள்ளக் கூடாது. சுமார் 20நிமிட நேரம் கழிந்த பின்னரே முதலில் நீர் அருந்திவிட்டுப் பின்னர் உணவு உட்கொள்ள வேண்டும்.

4.பயிற்சிகளை அவசரமாகவும் படபடப்போடும், முரட்டுத்தனமாகவும் செய்யக்கூடாது. பயிற்சிகளை நிதானமாகச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். நாம் ஒன்றும் சர்க்கஸ் வித்தை செய்து காண்பிக்கப் போவதில்லை.

5.ஆரம்ப காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் குறைந்த நேரத்திற்கு பயிற்சிகளை பழகிக் கொள்ளவேண்டும். பிறகு படிப்படியாக நேரத்தையும், எண்ணிக்கையையும் கூட்டிக் கொண்டே வரவேண்டும்.

வாங்க இப்ப பயிற்சிக்குள் நுழைவோம்
video

                           இந்த வீடியோவை நன்கு கவனித்து பாருங்கள்
video
விரிப்பின் மீது நேராக உட்கார்ந்து கால்களை நெடுக நீட்டிக் கொள்ள வேண்டும். பின்பு முன்னுக்கு குனிந்து மூச்சை விட்டுக் கொண்டே, கைகளால் கால்களின் பக்கவாட்டில் தேய்த்துக் கொண்டே சென்று கால்களின் கட்டை விரல்களை, கைகளின் ஆள்காட்டி விரலால்,கொக்கி போல் மடக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். கால் கட்டை விரல்களை கெட்டியாகப் பிடித்ததும், வயிறு எக்கிக் கொள்ளும். இப்படி கால் கட்டை விரல்களைத் தொட முயற்சிக்கும் போது முழங்கால் உயரக்கிளம்பும் அப்படி கால்கள் மேலெழும்புவதைத் தடுத்து உடலைக் கால்கள் மேல் வளைத்துக் கொஞ் சம் கொஞ்சமாக கால் கட்டை விரலை பிடித்து விட வேண்டும்.(பருமனாக இருப்பவர்கள் கால் கட்டை விரலைக்கூட தொடமுடியாது அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்தால் போதுமானது)கால் கட்டை விரல்களை பிடித்த பிறகு, தலையை கொஞ்சம் கொஞ்சமாக குனிந்து நெற்றி முழங்கால்களை சேரும்படி நெருக்க வேண்டும். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 25 முறை செய்ய வேண்டும் புதியவர்கள் 10 முறை செய்தால் போதும்.

இந்த பயிற்சியின் மூலம் எற்படும் பலன்கள்


இந்த பயிற்சி செய்யும் போது வயிறு நன்றாக மடிக்கப்படுவதால் வயிற்றிலுள்ள கொழுப்புகள் எரிந்து தொந்தி குறையும். காற்றுக் குழாய், விதானம், சிறுநீர்க்குழாய், இருதயத்திற்குப் போகும் கீழ் இரத்தக் குழாய், இதயத்திலிருந்து வரும் பெரிய இரத்த நாளம், ஆகாரக் குழாய், சிறுநீர்ப்பை, மண்ணீரல் பெருங்குடல் இவை அனைத்துமே விரிவடைந்து நன்கு செயல்படும் .இப்படி செயல்பட்டால் உடல் ஆரோக்கியம் பற்றிக் கூறவும் வேண்டுமா?
மேலும் சிறுநீர்த் தடையையும் இப்பயிற்சி நீக்குகிறது. நாடி இயக்கங்களின் குறைகளைப் போக்குகிறது. முதுகெலும்பிற்கு பலத்தைக் கூட்டுகிறது. இடுப்பு பலம் பெறுகிறது. இடுப்புவலி வாயுத்தொல்லை போன்ற உபாதைகள் நீங்கும்
இப்பயிற்சியை இடைவிடாமல் செய்து வருபவர்களுக்கு சர்க்கரை வியாதி வராது எப்படி? இந்த பயிற்சியினால் கல்லீரலுக்கு நல்ல இரத்த ஒட்டம் கிடைக்கிறது. கல்லீரலில் இன்சுலின் என்ற திரவம் சுரக்கிறது. இரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது இன்சுலின் என்ற பொருளே ஆகும். இது போதுமான அளவு கல்லீரலில் உற்பத்தி ஆகாவிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து அது நமது உயிருக்கே ஆபத்து விளைவித்துவிடும். இப்பயிற்சியை செய்யும்போது கல்லீரலில் நன்கு புத்துணர்வுடன் செயல்படுவதால் அங்கு இன்சுலின் தாராளமாக உற்பத்தியாகிறது. இந்த இன்சுலின் இரத்தத்தில் கலந்து சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
பெண்கள் இந்த பயிற்சியை செய்யலாம். இதனால் அவர்களுக்கு பிரசவ காலத்தில் சுகப்பிரசவம் ஏற்படும் மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வரவே வராது.

சில முன்னெச்சரிக்கைகள்
ஹெரண்யா நோய் உள்ளவர்களும், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் இப்பயிற்சியை மேற்க்கொள்ளக்கூடாது.

கர்ப்பவதிகள் முதல் மூன்று மாத கர்ப்பம் வரையில் மட்டுமே இப்பயிற்சியை செய்தல் வேண்டும்.

ஆரம்ப கட்டத்தில் எளிதில் இப்பயிற்சி கைகூடாது . அதற்காகப் பயிற்சியை விட்டுவிடக்கூடாது.

ஆரம்ப நாட்களில் வயிறு, முதுகெலும்பு, தொடை போன்ற இடங்களில் வலி எடுக்கும் வலியை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயிற்சியைப் பழகி வந்தால், படிப்படியாக வலி குறையும் பயிற்சியும் கைகூடும்.

மொத்தம் வயிற்றுக்கான 35 பயிற்சிகளில் இரண்டை இந்த பதிவில் சொல்லுவதாக இருந்தேன் ஆனால் பதிவு மிகவும் நீளமாகி விட்டதால் இன்னும் மூன்று நாட்களுக்குள் அந்த அடுத்த பயிற்சியை இரண்டாவது பதிவாக இடுகிறேன்.


இப்பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் பின்னூட்டம் இடுங்கள் அல்லது இமெயில் பன்னுங்கள்.

உடற்பயிற்சி செய்யும் முன் ஒரு நிமிடம் இப்பதிவை படியுங்கள்.பாகம்-2


உடற்பயிற்சி செய்யும் முன் ஒரு நிமிடம் இப்பதிவை படியுங்கள்.பாகம்-2


இந்த பதிவின் முந்தைய பாகம் புதியவர்கள் இந்த பதிவை படித்து பார்த்து விட்டு தொடரவும்.


உடற்பயிற்சி செய்யும் முன் ஒரு நிமிடம் இப்பதிவை படியுங்கள்.




சரி வாங்க விஷயத்துக்குள் நுழைவோம்.  நாம் குடிக்கும் நீர் அருத்தும் உணவு
நாம் அருந்தும் குடிபானங்கள்
1. தயவுசெய்து மது அருந்தாதீர்கள் அது மூளை செல்களை சாகடித்து விடும்.

2.உடலுக்கு தேவையான சுத்தமான தண்ணீர் குடியுங்கள்.

3.முடிந்தால் தினமும் பழ ஜுஸ் குடியுங்கள் அதற்காக கடையில் டப்பாக்களில் அடைக்கப்பட்ட எசன்ஸ் ஜுஸ்களை தவிருங்கள் இரண்டு நாட்களுக்கு மேல் வைத்திருந்தால் கெட்டு போகக் கூடிய வீட்டு தயாரிப்பு ஜுஸ்களை மட்டும் குடியுங்கள்.

4.காபி,டீ குடிக்காதீர்கள். என்னது குடிக்காம இருக்க முடியாதா? அப்படிப்பட்டவர்கள் நான்கு கப் காபி குடிப்பதை இரண்டு கப் காபியாக குறைத்துக் கொள்ளுங்கள் அல்லது மாற்று வழியை ஏற்ப்படுத்திக் கொள்ளுங்கள்.கீரின் டீ குடியுங்கள் (Green tea) உடம்பு குண்டாக உள்ளவர்கள் மட்டும் குடிக்கவும் இது கொழுப்பை குறைக்கக் கூடியாது.



5.மென் பானங்களை குடிக்காதீர்கள் பெப்ஸி,கோக் போன்ற பண்ணாட்டு மற்றும் உள்நாட்டு பானங்களாக இருந்தாலும் சரி இவைகளை குடித்தால் தான் உணவு செமிக்கும் என்ற நிலையில் நீங்கள் இருந்தால் தெரிந்துக் கொள்ளுங்கள் உங்கள் உடல் கெட்டுப் போய் விட்டது உணவு செரிக்க உடற்பயிற்சியே போதுமானது.

உடற்பயிற்சியும் உணவும்

”அளவு கடந்து உண்பவனுக்கும்அறவே உண்ணாதவனுக்கும்உடல்நலமில்லை”  
.அளவோடு உண்ன வேண்டும்; அளவுக்கு அதிகமான உணவு உட்கொண்டால் அதுவே விஷமாக மாறி உடல் அழிவுக்கு அது வழிகோலும்
.டயட் இருக்கின்றேன் என்று சொல்லிக் கொண்டு பட்டினி கிடக்கக் கூடாது
.முதலில் உண்ட உணவு நன்கு செரித்த பிறகு அடுத்த வேளை உணவு உட்கொள்ள வேண்டும்.
.சைவ அசைவ உணவு வகைகள் எது வேண்டுமானலும் அவரவர் விருப்பத்தைப் பொருத்து சாப்பிடலாம் ஆனால் அது உடலுக்கு சக்தியை தரக் கூடியதாய் இருக்க வேண்டும்.
.ஜங் புட் என்று சொல்லக்கூடிய (குப்பை உணவுகளை தவிருங்கள்) 

உறக்கம்

விடிய விடிய பதிவு எழுதிவிட்டு விடிந்த பிறகு உடற்பயிற்சி செய்யாதீர்கள்.
அது உடல் நலம் பெறுவதற்கு பதிலாக உடல் நல கேட்டை உண்டு பன்னி விடும் குறைந்தது ஆறு மணி நேரமாவது தூங்க வேண்டும்.

உடற்பயிற்சியாளர்களின் ஐந்து மணிநேர தூக்கம்
உடற்பயிற்சி செய்யதவர்கள் பத்து மணி நேர தூக்கத்திற்கு சமமானது

நல்ல உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஆழ்ந்த நித்திரை வரும். இதுவே பல நோய்களை தீர்த்து விடும்

இறுதியாக சில விஷயங்கள்

அளவுக்கு அதிகமாக உண்ணுதலும், உழைத்தலும்,உறங்குதலும் கூடாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை தேவையைவிடக் குறைவாக உண்ணுதலும்,உழைத்தலும்,உறங்குதலும் குறைபடினும் உடல் கெட்டு போய் விடும்