WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

செவ்வாய், 24 ஜனவரி, 2012

தோழியர் - 5 - அஸ்மா பின்த் யஸீத் أسماء بنت يزيد


தோழியர் - 5 - அஸ்மா பின்த் யஸீத் أسماء بنت يزيد print Email
வரலாறு - தோழியர்
செவ்வாய், 17 ஜனவரி 2012 17:41
அஸ்மா பின்த் யஸீத்
أسماء بنت يزيد
யர்முக் யுத்தம் முஸ்லிம்கள் ரோமர்களுடன் நிகழ்த்திய பிரம்மாண்டமான ஒரு போர். இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ரோமப் படையினர்; அவர்களை எதிர்த்து வெறும் நாற்பதாயிரத்துச் சொச்சம் முஸ்லிம்கள். அதில் முஸ்லிம் படைகள் அடைந்த வெற்றி ரோமர்களின் சாம்ராஜ்யத்தை உலுக்கி நகர்த்தி வரலாற்றில் பெரும் திருப்புமுனையை நிகழ்த்தியது. தோழர்கள் தொடரைப் படிப்பவர்களுக்கு இப்போரைப் பற்றிய முன்னறிமுகம் கிடைத்திருக்கும்.
போருக்குச் சென்றார்கள்; இரு படையினரும் போரிட்டார்கள்; இறுதியில் முஸ்லிம்களுக்கு வெற்றி என்று எளிதில் விவரித்துவிட முடியாத அளவிற்கு இதில் முஸ்லிம்கள் சந்தித்த சவால்கள் எக்கச்சக்கம். இருதரப்பிலும் ஏகப்பட்ட உயிரிழப்புகள், முக்கியமான பல தோழர்களின் மரணம் என்று நிறைய சங்கதிகள். படை அளவில் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் மிகக் குறைவு. எண்ணிக்கையிலும், தளவாட வசதிகளிலும் வல்லமை படைத்திருந்த வல்லரசுப் படைகளுடன் மோதுவதற்கு நிறைய வீரர்களைத் திரட்டி அனுப்ப வேண்டிய சவால் கலீஃபா அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுவுக்கு ஏற்பட்டிருந்தது. அனைத்துப் பகுதிகளுக்கும் தகவல் அனுப்ப, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவிற்குப் பிறகு புதிதாய் இஸ்லாத்தில் இணைந்திருந்த பல கோத்திரங்களின் வீரர்களும் முன்வந்து படை அணியில் சேர்ந்து கொண்டனர். அவர்களையும் களத்திற்கு அனுப்பி வைத்தார் கலீஃபா.

அக்காலத்தில் முஸ்லிம் படை அணியில் பெண்களும் இடம்பெற்றுப் போர் களத்திற்குச் செல்வது வழக்கம். களத்தில் போர் நிகழ, பின்னால் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்கியிருப்பார்கள் பெண்கள். காயமுற்ற வீரர்களுக்குச்  சிகிச்சை அளிக்க, பணிவிடை செய்ய என்று இதரப் பல பணிகளில் அவர்களின் பங்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது.

யர்மூக் யுத்தத்தில் முஸ்லிம் படையின் வலப்புற அணியின் தளபதி அம்ரு இப்னுல் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு. அவரது தலைமையில் பத்தாயிரம் வீரர்கள். இந்த அணியை ரோமப் படைகளின் இடப்புற அணி பெரும் உக்கிரத்துடன் தாக்கத் துவங்கியது. அதைத் தடுத்துக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தனர் அம்ரு இப்னுல் ஆஸும் அவர் படையினரும். எண்ணிக்கையில் மிகைத்திருந்த ரோமர்கள் முன்னேறிக் கொண்டே வர, முஸ்லிம்கள் பின்னால் நகர வேண்டிய நிலை ஏற்பட்டுப்போனது. முஸ்லிம்களின் இதர படை அணிகளும் கடுமையாய்ப் போரில் ஈடுபட்டிருக்க, இவர்களிடம் வந்து இணைந்து உதவ இயலாத இக்கட்டான தருணம் அது. ரோமர்கள் மூர்க்கமாய்த் தள்ளிக்கொண்டேவர, களத்தின் வெகுபின்னே அமைக்கப்பட்டிருந்த தம் பெண்களின் கூடாரம்வரை வந்துவிட்டனர் முஸ்லிம்கள். அந்நிலையில் புதிய முஸ்லிம் வீரர்கள் சிலர் அழுத்தம் தாங்காமல் தப்பியோட ஆரம்பிக்க, விந்தை ஒன்று நிகழ்ந்தது.

கூடாரங்களில் இருந்து இந்தக் களேபரத்தைப் பார்த்துவிட்ட முஸ்லிம் பெண்கள் வெளியில் ஓடிவந்தார்கள். தப்பியோடுவரைப் பிடித்து முகத்திலேயே குத்து. சரமாரியான குத்து. அம்ரு இப்னுல் ஆஸின் மகள் இரைந்து கத்தினார், “தன் மனைவியை விட்டு ஓடுபவனின் முகத்தை அல்லாஹ் அவலட்சணமாக்குவானாக. மானம், மரியாதையைப் பறக்க விட்டு ஓடுபவனை, அல்லாஹ் அவலட்சணமாக்குவானாக.”

மற்றொரு பெண்மணி, “எங்களை விட்டு ஓடினால் அப்படியே ஓடிப்போங்கள். நீங்களெல்லாம் எங்கள் கணவர்களே அல்லர்.”

‘கலகமாம்; பிரச்சினையாம். நமக்கெதுக்கு வம்பு. உள்ளே வந்துவிடுங்கள்’ என்று கணவனைப் பொத்தி உள்ளே இழுத்துக்கொள்ளும் கோழைத்தனம் அறியாத பெண் வேங்கைகள் அவர்கள். ஓடுபவனது புத்தியை எட்டி உதைத்தன அந்த வார்த்தைகள். பொளேரென்று அறை வாங்கியதுபோல் சடுதியில் நிதானம் தோன்றியது. புது உறுதி புத்தியிலும் புஜத்திலும் புடைக்க, அந்தப் புதியவர்களின் தாக்குதல் ரோமர்கள்மீது முன்னரைவிடக் காட்டமாய் இறங்க ஆரம்பித்தது.

இதற்குள் ரோம வீரர்களின் அணி பெண்களின் பகுதிவரை வெகுவாய் அண்மி வந்துவிட்டிருந்தது. அப்பொழுது அது நிகழ்ந்தது.  கூடாரம் அமைக்க நாட்டப்பட்டிருந்த பெரும் கோலை எடுத்துக்கொண்டு ரோம வீரர்களை நோக்கி திடுதிடுவென்று ஓடிவந்தார் ஒரு பெண்.
அவர், அஸ்மா பின்த் யஸீத், ரலியல்லாஹு அன்ஹா.
oOo
மதீனாவில் அக்காலத்தில் வாழ்ந்துவந்த இரு பெரும் கோத்திரங்கள் அவ்ஸ், கஸ்ரஜ். அப்துல் அஷ்ஷால் என்பது அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு கிளை. இந்த அப்துல் அஷ்ஷால் குலத்தைச் சேர்ந்தவரே அஸ்மா பின்த் யஸீத் இப்னுல் ஸகன். முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிற்றன்னை மகள் இவர்.
இக்குலத்தின் பெருந்தலைவராய்த் திகழ்ந்தவர் ஸஅத் இப்னு முஆத் ரலியல்லாஹு அன்ஹு. ஸஅதின் தாயார் பெயர் கப்ஷா பின்த் ரஃபீஉ.  இந்த இரண்டு பெண்மணிகளும் முக்கியமான இரு தோழர்களுக்கு நெருங்கிய உறவு என்பதை அறிந்து கொள்ளவே இந்த உறவுமுறை விளக்கம். நபியவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து வந்ததும் அவர்களிடம் சத்தியப் பிரமாணம் அளி்த்த முதல் இரு அன்ஸாரிப் பெண்கள் இவர்கள். ரலியல்லாஹு அன்ஹுமா.

அஸ்மாவிடம் சிறப்பொன்று அமைந்திருந்தது. தெளிவாகவும் அருமையாகவும் பேசும் நாவன்மை. அதற்கான சான்றிதழ் நபியவர்களிடமிருந்தே கிடைத்தது அவருக்கு. பெண்கள் கூடியமர்ந்தால் பலவற்றையும் பேசி மகிழ்வதும் அங்கலாய்ப்பதும் வழக்கமில்லையா? அதைப்போல் அக்காலத்தில் தோழியரும் கூடிப்பேசுவது வழக்கம்தான். ஆனால் முக்கியமான ஒரு வித்தியாசம், அது வெறும் வெட்டிப்பேச்சாக இல்லாமல் இஸ்லாம், ஈமான் சார்ந்த கவலைகள் அவர்களது பேச்சை ஆக்கிரமித்திருந்தன  என்பதே!.

ஒருநாள் நபியவர்கள் தம் தோழர்களுடன் அமர்ந்திருந்தபோது அங்கு வந்தார் அஸ்மா பின்த் யஸீத்.

“அல்லாஹ்வின் தூதரே! என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். முஸ்லிம் பெண்கள், அவர்தம் தூதுவராக என்னைத் தங்களிடம் அனுப்பியுள்ளார்கள். நான் அவர்கள் கூறியதைத் தங்களிடம் தெரிவிக்கிறேன். இங்கு நான் சொல்லப்போகும் அவர்களது கருத்தே என் கருத்தும்கூட. ஆண்கள் பெண்கள் இரு பாலாருக்கும் பொதுவாக அல்லாஹ் தங்களை அனுப்பி வைத்துள்ளான். நாங்கள் உங்களிடம் நம்பிக்கைக் கொண்டோம்; பின்பற்றுகிறோம். பெண்களாகிய நாங்கள் வீட்டின் தூண்களைப் போல் தனித்து வைக்கப்பட்டுள்ளோம். நாங்கள் கணவர்களுக்கு தாம்பத்ய சுகம் அளிக்கிறோம்; அவர்களின் பிள்ளைகளைச் சுமக்கிறோம். அவர்கள் ஜிஹாதுக்குச் சென்றுவிடும்போது அவர்களது வீடு, வாசல், செல்வத்தைப் பாதுகாத்து அவர்களின் பிள்ளைகளையும் வளர்க்கிறோம்.

ஆண்களுக்கோ கூட்டுத் தொழுகையும் ஜும்ஆத் தொழுகையும் பிரேத நல்லடக்கத்தில் ஈடுபவதும் ஜிஹாது புரிவதும் என்று பல நல் வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன.  அல்லாஹ்வின் தூதரே! அவர்களது நற்கூலியில் எங்களுக்கும் பங்கு இருக்க வேண்டுமில்லையா?”

தெளிவான, அழகான, நேர்மையான, சுருக்கமான உரை அது. வியந்துபோன நபியவர்கள் தம் தோழர்களிடம் திரும்பி, “தமது மார்க்கம் பற்றி இத்தனை அழகாக வேறு எந்தப் பெண்ணாவது கேள்வி எழுப்பி, பேசி கேட்டிருக்கிறீர்களா?”

“அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக இல்லை. ஒரு பெண் இந்தளவு தெளிவாய்ப் பேசக்கூடும் என்று நாங்கள் நினைத்ததில்லை.”

“அஸ்மா! உன் தோழியரிடம் சென்று சொல், ‘தம் கணவனுக்குச் சிறந்த இல்லத்துணையாகவும் அவனது மகிழ்வே தனது நாட்டமாகவும் அவனது தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியவளாகவும் ஒரு பெண் அமையும்போது ஆணின் நற்கூலிகள் என்று நீ விவரித்ததற்கு இணையான அனைத்தும் அவளுக்கும் கிடைத்துவிடும்’ என்று.”

இறைத் தூதர் சொல்லியதைக் கேட்டு மகிழ்ந்து இறைவனைப் புகழ்ந்தவாறு அங்கிருந்து விலகினார் அஸ்மா.

கணவனை மகிழ்வித்துக் குடும்பம் பேணுவதில் கிடைக்கும் நன்மையும் சிறப்பும் ஆண் அப்பட்டமாய்ப் புரியும் நற்காரியங்களுக்கு இணையானது எனும் ஆன்ம பலன்கள் இருக்கட்டும். அவ்வளவு உயரிய நற்பலன்கள் இகலோக குடும்ப வாழ்விலா? எப்படி இது? சிறிது யோசித்தால் தெளிவு தென்படும். ஓர் உயரிய சமூகம் உருவாவதற்கு இத்தகு குடும்பங்களே சிறப்பான அடித்தளம் அமைக்கின்றன. வீடு உயர நாடு உயரும் எனில் வீடு உயர, குடும்பத் தலைவி வழங்கும் அர்ப்பணிப்பு இருக்கிறதே, அது அச்சாணி!. உலகமும் உலகக் கல்வியும் கற்றுத் தருவது என்ன? அதற்கு நேர் மாறானவற்றை! அது இழுக்கு என்பதை! மாறாக அனாச்சாரமும் விபச்சாரமும் நம் சமகாலத்தில் சமூக அங்கீகாரம் பெற்ற நாகரிகத்தின் அடையாளங்களாகிவிட்டன. விளைவு? இன்று கெட்டழிந்து சின்னாபின்னமாகியிருக்கும் குடும்பங்களும் சமூகமுமே அதற்குச் சான்று.

ஒருமுறை அஸ்மா தம் தோழியருடன் அமர்ந்திருக்கும்போது அவரைச் சந்தித்தார்கள் நபியவர்கள். அவர்களுக்கு ஸலாம் பகர்ந்துவிட்டு நல்லுரை ஒன்று கூறினார்கள். “உங்களிடம் அன்பு காட்டுபவர்கள்மீது நன்றி தெரிவிப்பதில் கவனமுடன் இருந்துகொள்ளுங்கள்.”

அதன் உள்ளர்த்தத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ள நபியவர்களிடம் மேற்கொண்டு வினா தொடுக்கும் துணிவு அஸ்மாவுக்கு மட்டுமே இருந்தது. “அல்லாஹ்வின் தூதரே! அன்பு செலுத்துபவர்களிடம் நன்றி மறப்பது என்பது என்ன?”

நபியவர்கள் விளக்கமளித்தார்கள். “பெண்களாகிய உங்களில் ஒருவர் திருமணம் தாமதமாகி நீண்டநாள் பெற்றோரின் பாதுகாப்பில் இருந்திருப்பீர்கள். பின்னர் அல்லாஹ்வின் அருளால் அவளுக்குக் கணவன் அமைந்து, நல்ல வாழ்க்கையும் அமைந்து, பிள்ளைகளும் பிறந்திருக்கும். ஒருநாள் ஏதேனும் ஒரு சிறு விஷயத்தில் கணவனிடம் கோபமடைந்து நன்றி மறந்துபோய் அவள் கணவனிடம் உரைப்பாள், ‘உன்னிடமிருந்து எனக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை’ என்று.”

எவ்வளவு உண்மையான அறிவிப்பு இது?

“உன்னைக் கட்டிக்கொண்டு நான் என்ன பலனைக் கண்டேன்?” “அப்படி என்ன எனக்குப் பெரிதாய்ச் செய்துவிட்டாய்?” இத்தகு உரையாடல்கள் யதார்த்தமான நிகழ்வாகப் பல குடும்பங்களில் நடைபெறுவதை நாம் காணவில்லை? இந்தப் பாடங்களெல்லாம் சிறப்பாய்ப் படித்து புரிந்து கொண்டார் அஸ்மா. ஏறத்தாழ நபியவர்களின் 81 ஹதீஸ்களை அவர் அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

“நபியவர்களின் ஒட்டகமான அத்பாவின் சேணைக் கயிற்றை நான் பிடித்துக் கொண்டிருந்தபொழுது அவர்களுக்கு சூரா அல்-மாயிதா முழுவதுமாய் அருளப்பட்டது. அதன் கனம் எந்தளவு இருந்ததென்றால் ஒட்டகத்தின் கால்கள் அனேகமாய் ஒடிந்துவிடும் அளவிற்குப் பளு ஏற்பட்டுப்போனது” என்று அறிவித்துள்ளார் அஸ்மா. நபியவர்களுக்கு ஜீப்ரீல் அலைஹிஸ் ஸலாம் வஹீ அறிவிக்கும்போது அது எத்தனை கடினமாய் இருந்தது என்பதற்கு இந்த ஹதீதும் ஒரு சான்றாய்க் குறித்து வைக்கப்பட்டுள்ளது.
oOo
வீரம் அஸ்மாவின் குடும்பம் முழுவதும் வியாபித்துப் பரவியிருந்திருக்கிறது. உஹதுப் போரில் ஏற்பட்ட கடினச் சூழல் பற்றித் தோழர்கள் வரலாற்றில் ஆங்காங்கே படித்து இருப்பீர்கள். அந்தப் போரில் படைகள் சிதறி உக்கிரமான நிலை ஏற்பட்டபோது உறுதியுடன் நின்று போராடியவர்களில் அஸ்மாவின் சகோதரர் இமாராஹ் இப்னு யஸீதும் ஒருவர். அந்தப் போரில் அவர் கொல்லப்பட்டு உயிர் தியாகி ஆனார். அவரின் தந்தையும் தந்தையின் சகோதரரும்கூட அதே போரில் கொல்லப்பட்டனர்.

இத்தகு இழப்புகளெல்லாம் சோகம், விரக்தி போன்றவற்றுக்குப் பதிலாக அஸ்மாவினுள் வீரமும் திடமும் வளர்க்கவே உதவின. அல்லாஹ்வும் நபியும் அவர்களுக்குத் தங்களது உயிரைவிட மேல். நபியவர்களுடன் பலமுறை போரில் கலந்து கொண்டிருந்திருக்கிறார் அவர். மக்காவிற்கு நபியவர்கள் உம்ரா சென்றபோது அந்தக் குழுவில் அஸ்மாவும் ஒருவர். ஆனால் நபியவர்கள் குரைஷிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதும் பல விவாதங்களுக்குப் பிறகு ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்டதும் தனி வரலாறு.

ஹுதைபியா உடன்படிக்கை நிகழ்விற்கு முன்னர், உதுமான் ரலியல்லாஹு அன்ஹு கொல்லப்பட்டதாய்ச் செய்தி பரவிக் குழப்பம் தோன்றிய நேரத்தில், ‘உயிரைக் கொடுத்தும் போராடுவோம்’ என்று மரத்தினடியில் சத்தியப் பிரமாணம் செய்து கொடுத்தனர் தோழர்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க 'பைஅத்துர் ரிள்வான்' எனும் அந்தப் பிரமாணம் அளித்தவர்களில் ஒருவர் அஸ்மா.

இப்படி அவரது இயல்பிலும் உதிரத்திலும் வீரம் கலந்திருந்ததால் யர்மூக் போரின்போது களத்திற்குச் சென்றிருந்தார் அஸ்மா. இக்கட்டான போர்ச் சூழ்நிலையில், ரோம வீரர்களின் அணி பெண்களின் பகுதிவரை வந்துவிட்டிருக்க, கூடாரம் அமைக்க நாட்டப்பட்டிருந்த பெரும் கோலை எடுத்துக்கொண்டு ரோம வீரர்களை நோக்கித் திடுதிடுவென்று ஓடினார் அஸ்மா. மிரட்டி விரட்டும் காரியம் போலன்றி, அந்தக் கம்பைக் கையில் ஏந்தியவர் தனி ஆளாய் ஒன்பது ரோமப் போர் வீரர்களைக் கொன்று விட்டுத்தான் ஓய்ந்தார். சிலிர்க்கவைக்கும் வீரம் அவருடையது.

முன்னேறி வந்திருந்த ரோமப் படைகளைக் கன்னாபின்னாவென்று தாக்கிக் கொன்று அவர்களைப் பின் தள்ளியவாறு விறுவிறுவென்று முன்னேற ஆரம்பித்தனர் முஸ்லிம்கள். வலப்புற அணி தம் பகுதிகளை முழுக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவந்தது.

இந்தப் போரின் வெற்றிக்குப் பிறகு, முஸ்லிம்கள் வசம் ஸிரியா வந்ததும் அங்கேயே தங்கிவிட்டார் அஸ்மா. பெண்களுக்கு இஸ்லாமியப் பாடங்களைக் கற்றுத்தருவது அவரது தலையாய பணியாகிப்போனது. நீண்ட ஆயுளுடன் ஏறத்தாழ 90 வயதுவரை வாழ்ந்திருந்தார்.

ஹிஜ்ரீ 69ஆம் ஆண்டு மரணம் அவரைத் தழுவியது. டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள 'பாபுஸ்ஸகீர்' என்னும் அடக்கத்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார் அஸ்மா பின்த் யஸீத்.

ரலியல்லாஹு அன்ஹா!
oOo
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

<தோழியர் - 2 | தோழியர் - 3>

முஸ்லிம் பெண்கள் பிழைப்புக்காக வெளிநாடு போகலாமா? ஐயமும்-தெளிவும் - முஸ்லிம்களுக்காக


முஸ்லிம் பெண்கள் பிழைப்புக்காக வெளிநாடு போகலாமா? print Email
ஐயமும்-தெளிவும் - முஸ்லிம்களுக்காக
ஞாயிறு, 15 ஜனவரி 2012 13:59
ஐயம்:
assalamu alaikkum

பொதுவாக, பெண்கள் வெளிநாடு போவது இஸ்லாத்தில் தடுக்கப் பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஆயினும், குடும்பக் கஷ்டங்களினால் அவற்றைத் தாங்க முடியாது, அதே நேரம் யாரும் கஷ்டங்களைப் போக்க உதவி செய்யவும் இல்லை, அல்லது எதோ ஒரு சிறு உதவி செய்தாலும் அது போதாத நிலையில், பெண்கள் வெளிநாடு சென்று உழைக்க கிளம்புகிறார்கள்.

இப்படி, "முஸ்லிம் பெண்கள் வெளிநாடு சென்று உழைப்பது ஹராம்" என பல மவ்லவிகள் (முக்கியமாக தப்லீக், thawheed, salafi மவ்லவிகள்) கூறுகிறார்கள். ஆனால், இந்தப் பெண்களுக்கு நல்வாழ்வுக்குரிய மாற்று வழி தீர்வு எதுவும் சொல்கிறாரில்லை. கேட்டால், "கஷ்டத்தைப் பொறுத்துக்கொண்டு வாழ வேண்டும் இறைவன் சுவர்க்கம் தருவான்" என்று கூறுகிறார்கள். எனவே, பெண்கள் வெளிநாடு போய் உழைப்பது பற்றி, இஸ்லாத்தின் நிலைப்பாட்டை எழுதுங்கள்.

- சகோ. easternAHI மின்னஞ்சல் வழியாக

தெளிவு:

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

ஆணோ, பெண்ணோ வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைச் சகித்துக்கொண்டு, இறைவழியில் பொறுமையை மேற்கொண்டால் இறைவன் சுவர்க்கத்தைத் தருவான் என்பது உண்மையே. அதேபோல், ஜீவாதாரத் தேவைக்காக வாழ்க்கையில் எதிர் நீச்சலை மேற்கொண்டு கஷ்டப்பட்டு "உழைத்து நேர்மையுடன் பொருளீட்டினாலும் சுவர்க்கத்தைத் தருவேன்" என்பதும் இறைவனின் வாக்குறுதி!

ஆணாயினும் பெண்ணாயினும் ''உழைப்பது ஹராம்'' என்று இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை!

ஆனால், இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, ஃபிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள் வளைகுடாவில் பிழைக்கப்போய், அவர்களுள் பலர் அனுபவிக்கும் கொடுமைகளைக் கருத்தில் கொண்டு, "பெண்கள் பிழைப்புக்காக வெளிநாடு செல்வது ஹராம்" எனச் சிலர் கருத்துக் கூறியிருக்கலாம். தங்கள் வீட்டு வேலைக்காரப் பெண்களைத் தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக நடத்துகின்ற, அவளுடைய குடும்பத்தின் அத்தனை தேவைகளையும் தம் தேவைகளாக ஏற்றுச் செயல்படுகின்ற இறையச்சம் உள்ளவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

முஸ்லிம் பெண்கள், பிழைப்புத் தேடி வெளிநாட்டுக்குப் போகவேண்டிய கட்டாயத் தேவையையும் சூழலையும் பற்றி இங்குத் தெரிந்து கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.

"ஆண்கள் பெண்களிடம் ஆளுமையுடையவர்கள்" எனும் கருத்தில் அமைந்த 4:34ஆவது இறைமறை வசனத்தில், ஒரு குடும்பத்திற்கான பொருளாதாரச் செலவினங்களுக்கு அந்தக் குடும்பத்தின் தலவனே பொறுப்பேற்கத் தகுதியுடையவனாவான் எனும் அடிப்படை பொதிந்துள்ளது.

ஆனால், ஒரு குடும்பப் பெண்ணுக்கு ஊதாரியான, குடும்பப் பொறுப்பற்ற கணவன் அமைந்துவிட்டாலோ, மணமாகி குழந்தைகளைப் பெற்றபின் கணவன் இறந்துவிட்டாலோ அந்தக் குடும்பத்தைப் பொறுப்பேற்க எவரும் இல்லாமல் அல்லது இருந்தும் முன்வராமல் போய்விட்டாலோ பெண்கள் சம்பாதித்து அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய இக்கட்டான கட்டாயச் சூழல் ஏற்படுகின்றது. அதனால், ஆதரவற்ற பெண்கள் குறுகிய காலத்தில் பொருளீட்ட ஆசைப்பட்டுத் தேர்ந்து கொள்வது 'வெளிநாட்டு வேலை'.

''பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடிக்கொள்ளுங்கள்!'' (அல்குர்ஆன் 62:10) இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான அனுமதியாகும். அயல்நாடு சென்று ஆண்கள் உழைப்பதுபோல், பெண்களும் அயல்நாடு சென்று ஹலாலாக உழைத்துச் சம்பாதிப்பதும் ஆகுமானதே!

பெண்களுக்கான வாழ்வாதாரத் தேவைகளைக் குடும்பத்து ஆண்கள் பூர்த்தி செய்திடல் வேண்டும் என்பதுபோல், ஆதரவற்றப்  பெண்கள், சிறுவர், பலவீனமான முதியோர் ஆகியோருக்கு இஸ்லாமிய அரசு பொறுப்பேற்க வேண்டும்!

"கடன் உள்ள நிலையில் மரணித்தவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படுவார்கள். "இவர் கடனை நிறைவேற்றத்தக்க சொத்துகளை விட்டுச் சென்றுள்ளாரா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்பார்கள். அவர் விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டால் அவருக்கு(ஜனாஸா)த் தொழுகை நடத்துவார்கள். அவ்வாறு இல்லையெனில் முஸ்லிம்களை நோக்கி ''உங்கள் தோழருக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று கூறிவிடுவார்கள்
(புகாரி 5371).

அல்லாஹ் அவர்களுக்கு அநேக வெற்றிகளை வழங்கியபோது (அதாவது அரசுக் கருவூலத்தில் நிதிகள் குவிந்தபோது) "மூஃமின்களுக்கு அவர்களின் உயிர்களைவிட நான் மிகவும் உரித்தானவன். எனவே மூஃமின்களில் யாரேனும் கடனை விட்டு மரணித்தால் அதை நிறைவேற்றவது என்னைச் சேர்ந்ததாகும். யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவரது வாரிசுகளுக்கு உரியதாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 2298, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்).

ஒருவர் (மரணமடைந்து) விட்டுச் சென்ற செல்வம் அவரின் வாரிசுகளுக்குரியதாகும். ஒருவர் (ஆதரவற்ற) மனைவி மக்களைவிட்டுச் சென்றால் அவர்களைப் பராமரிப்பது நம்முடைய பொறுப்பாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (புகாரி 2398).

கணவன் மரணித்து, குடும்பத்தில் ஆண் ஆதரவற்று மனைவி, மக்கள் நிர்க்கதியான நிலையில் விடப்படும்போது அவர்களைப் பராமரிப்பது நமது பொறுப்பாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதாவது, ஆதரவற்ற பலவீனமானவர்களைப் பராமரிப்பது இஸ்லாமிய ஆட்சியின் பொறுப்பாகும்!

சொந்த உழைப்பில் குடும்பத்தை நடத்தவேண்டிய கட்டாயத்திலிருக்கும் பெண்களுக்கு, "வெளிநாட்டுக்குச் சென்று பிழைக்கக்கூடாது" என்று தடைவிதித்தல் பொருந்தாது. ஏனெனில், எல்லா அடிப்படை வசதிகளையும் பெண்களுக்கு அளித்துவிட்டு, அதன்பிறகு, "வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாட்டுக்குப் போகாதே!" என்று தடுக்கும் உரிமை
இஸ்லாமிய அரசுக்குத்தான் உண்டு
! வறுமையால் வாடும் பெண்களுக்கு, அவர்களுக்கான எந்த உதவியும் செய்யாமல், உள்ளூரில் பிழைத்துக்கொள்ள வழிவகை தேடாமல், வெறுமனே ஃபத்வா கொடுப்பது நியாயமில்லை.

"முஸ்லிம் பெண்கள் பிழைப்புக்காக வெளிநாட்டுக்குப் போவது ஹராம்" என ஃபத்வா கொடுப்பவர்கள், ஆதரவற்ற பெண்களுக்கு உள்ளூரிலேயே உள்நாட்டிலேயே பாதுகாப்பான வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுக்க முன்வந்தால் பாராட்டலாம். ஆனால், அது ஆகப்போவதில்லை என்று உங்கள் கேள்வியிலிருந்து விளங்குகிறது.

எனவே, ஆதரவற்ற பெண்கள் அரசு அல்லது ஜமாஅத்தாரின் உதவியற்ற நிலையில், தன் கையே தனக்கு உதவி என உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் சூழ்நிலைக்கு ஆளாகின்றனர். உள்ளூர், வெளிநாடு என இவர்கள் உல்லாசப் பயணமாகச் செல்லவில்லை. உழைத்துப் பொருளீட்டுவதற்காக செல்கின்றனர். அதுவும் வெளிநாட்டுக்குச் சென்றுவந்த, தம் நிலையை ஒத்தவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்துகொண்டே
பெரும்பாலும் செல்கின்றனர். எனவே, வெளிநாட்டுக்குப் பிழைப்பைத் தேடிப் போவதா வேண்டாமா என்பது அவரவரின் தேவை, கட்டாயம், நிர்ப்பந்தம், பயன், பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அப்பெண்கள் தீர்மானிப்பதாகும்.

மற்றபடி, உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ ஹலாலான முறையில் உழைத்துப் பொருளீட்டிக் கொள்வதற்கு இஸ்லாம் பெண்களுக்குத் தடை விதிக்கவில்லை.

(இறைவன் மிக்க அறிந்தவன்)