WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

சனி, 17 டிசம்பர், 2011

தென்னை தரும் தொழில்கள்


தென்னை தரும் தொழில்கள்

தென்னை மரங்கள் வளர்ப்பில் கேரள மாநிலம் முதல் இடத்தை பெற்றுள்ளது.  தொன்னையின் மூலமாக பல்வேறு பொருட்களை நாம் தயாரிக்கலாம்.  தேங்காய், இளநீர் ஆகியவற்றில் இருந்து பல புதிய பொருட்களை பெறமுடியும்.  அதன் மூலம் புதிய தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கமுடியும்.

நாட்டுக்கு அன்னிய செலாவணியை ஈட்டித்திரும் வகையில் பல புதிய தொழில் நுட்பங்களை தென்னை வளர்ச்சி வாரியம் கண்டுபிடித்து உள்ளது.

தேங்காய் தண்ணீரின் பயன்கள்:-

கேரளாவில் தேங்காய் தொடர்பான தொழிலின்போது சுமார் 25 கோடி லிட்டர் தேங்காய் தண்ணீர் வீணாகிறது.

தேங்காய் தண்ணீரில் 5.4 சதவீதம் திடப்பொருளும், 2.0 சதவீதம் சர்க்கரையும், 0.5 சதவீதம் தாதுஉப்பும், தலா 0.1 சதவீதம் புரதம் மற்றும் கொழுப்பும் உள்ளது.  வீணாக்கப்படும் தேங்காய் தண்ணீரை சேமித்து பல்வேறு வகையில் பதப்படுத்தி இளநீரில் இருக்கும் தன்மையை மாற்றி கண்ணாடி பாட்டில்கள், பாலிதீன் பைகளில் அடைந்து விற்பனை முறைபற்றியும் அதுபற்றிய தொழில் நுட்பத்தையும் திருவனந்தபுரத்தில் இருந்து இயங்கும் தேங்காய் பொருள் ஆராய்ச்சிக்கூடம் கண்டுபிடித்து உள்ளது.

இன்று ஊறுகாய் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களை பதப்படுத்துவதற்கு அசிட்டிக் ஆசிட் என்ற அமிலத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட வினிகரையே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்.  இதற்கு மாறாக தேங்காய் தண்ணீரில் இருந்து தயாரிக்கப்படுகிற வினிகர் இயற்கை தன்மையுடன் இருப்பதால் இத்தகைய வினிகருக்கு மேலைநாடுகளில் நல்ல வரேற்பு இருக்கிறது.  உள்நாட்டிலும் வளமான எதிர்காலம் உள்ளது.

தேங்காய் தண்ணீரில் சர்க்கரை மற்றும் அசிட்டிக் அமிலம் ஆகியவற்றை கலந்து அன்னாசிப்பழ சக்கையையும் சேர்த்து வளர்ப்பு முறையில் ஜெல்லி தயாரிக்கலாம்.

இதை கண்ணாடி ஜாடிகளில் 2 அல்லது 3 வாரங்கள் வைத்திருந்து வளர்த்து அதன் பிறகு பல்வேறு முறைகளில் பக்குவப்படுத்தி துண்டுகளாக்கி விற்பனை செய்யலாம்.  இந்த ஜெல்லி பனை நுங்குபோல் ஒருவித குளிர்ச்சியும், மென்மையான சுவையையும் உடைய தின்பண்டமாகும்.  இதேபோல் பர்பி, அல்வா போன்றவற்றையும் தயாரிக்க முடியும்.

தேங்காய் பால் பவுடர் :-

இன்றைய உணவு தயாரிப்பில் தேங்காயின் பங்கு அளப்பரியது.  இன்றைய வேகமான உலகில் சமையலுக்கு தேங்காய் பால் எடுப்பது என்பது நேரம் எடுக்கும் வேலையாக இருக்கிறது.

இதுபோன்றவர்களுக்கு தேங்காய் பாலை பிழிந்து அதனை பக்குவப்படுத்தி பவுடராக டின்களிலும், பாலிதீன் பைகளிலும் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.

என்ன நண்பர்களே! தேங்காயில் இருந்து இவ்வளவு பொருட்களை தயாரிக்க முடியுமா என்று எண்ணுகிறீர்களா, இதுமட்டுமல்ல இன்னும் ஏராளமான தின்பண்டங்களையும், தேங்காய் ஓட்டில் இருந்து பல்வேறு கலைப்பொருட்களையும் உற்பத்தி செய்து லாபம் சம்பாதிக்க முடியும்.
Labels:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக