WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

வியாழன், 6 டிசம்பர், 2012

ஹஜ் அனுபவங்கள் ‍ 1


December 6, 2012

ஹஜ் அனுபவங்கள் ‍ 1

புனித கஃபா




புனித மக்கா நகரில் அமையப்பட்ட இறை இல்லம்.முழுப்பெயர் கஃபதுல்லா ஆகும்.வானம்,பூமி ஆகியவற்றை படைப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அல்லாஹ் கஃபாவை படைத்து விட்டான் என்று அபூஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள்.ஆரம்பத்தில் வெறும்  மணல்மேடாக இருந்தது.அதில் வானவர்கள் அமர்ந்து வணக்கம் செய்தனர்.

இறைவனின் ஆணைப்படி ஆதி தந்தை ஆதம் அவர்கள் கட்டிடம் எழுப்பினாரகள்.5000ஆண்டுகளுக்கு முன்னர் இப்றாஹீம் அலை அவர்கள் கஃபாவை கட்டினார்கள்.

நபிமார்கள் அனைவரும் இங்கு வந்து அல்லாஹ்வை தொழுது இருக்கின்றார்கள்.ஹஜ் செய்து இருக்கின்றார்கள்.

கருங்கல்லால் கட்டப்பட்ட கஃபாவின் உயரம் சுமார் 50 அடி,நீளம் 40 அடி,அகலம் 25 அடியும் நான்கு மூலைகளும் கொண்ட சதுரவடிவானது. 99 வாயில்களைக்கொண்டது.இப்பொழுது சவுதி அரசாங்கத்தால்மிகப் பெரிய அளவில் விரிவு படுத்தப்பட்டு பல லட்சம் மக்கள் தொழும் பிருமாண்டமான மஸ்ஜித் ஆக திகழ்கின்றது.

ஹரம் ஷரீஃபில் உள்ள பிருமாண்டமான  நான்காவது தளத்தில்(மொட்டை மாடி)சுற்றுப்புற சுவரின் அருகே சேரில் உட்கார்ந்து கஃபதுல்லாவை கண்குளிர பார்த்துக்கொண்டே இருக்கலாம் நேரம் போவதே தெரியாமல்.அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் நடுநிசி 12 மணிக்கு எடுத்த புகைப்படம் இது.


பெண்களுக்கான வாயில்
.




87,88 பெண்களுக்கான பிரத்யேகமான வாயில்.இதனுள்ளே சென்றால் பளீர் என்ற விளக்கொளியும் அதீத ஏஸி சில்லிப்பும் என்னை மிகவுமே ஈர்த்து விட்டதால் அநேகமாக இங்கே சென்றே தொழுவேன்.அங்கு சீலிங்கில் போட்டு இருக்கும் பிருமாண்டமான சாண்ட்லியர் நூற்றுக்கணக்கில் இருக்கும்.அதில் ஒன்றுதான் இது.



கிங் அப்துல் அஜீஸ் கேட்



கேட் நம்பர் ஒன்று .இதற்கு கிங் அப்துல் அஜீஸ் பெயரை வைத்துள்ளார்கள்.இந்த கேட்டுக்கு நேராக உள்ள வீதியில் உள்ள ஹோட்டலில்தான் எங்கள் ஜாகை.யாரை சந்திக்க வேண்டுமோ இந்த கேட்டை அடையாளமாக வைத்து சுலபமாக சந்தித்துக்கொள்வோம்.இதற்கு எதிரே கிளாக்டவர் என்றும் பிருமாண்டமான ஹோட்டல்.அதன் உச்சியில் மிகப்பெரிய கடிகாரம்.மக்காவின் எந்த வீதியில் சென்றாலும் இந்த கிளாக்டவர் நம் கண்களுக்கு புலப்படும்.


மிக‌ நெருக்கத்தில் கஃபதுல்லாஹ்




இது ஒரு அரிய காட்சி.எப்பொழுதும் எறும்பு மொய்த்தாற்போல் ஹரத்தை சுற்றி மனிதத்தலைகள் மொய்த்திருக்கும்.இப்பொழுது யாருமே இல்லாத ஒரு படம் வியப்பை தருகின்றதா?கஃபாவை சுத்தம் செய்யும் பொழுது மிக நெருக்கத்தில் முதல் ஆளாக நின்று கொண்டு கஃபாவை கண்குளிர பார்த்தேன்.மிக நெருக்கத்தில் எடுத்த படம் ஆதலால் கஃபாவை முழுவதுமாக படம் எடுக்க இயல்வில்லை."ஹாஜி தரீக் தரீக்" என்ற கூக்குரலை பொருட்படுத்தாது ஆற அமர போட்டோக்கள் கிளிக் செய்தேன்.என்னை வைத்து எடுக்க பக்கத்தில் ஆள் இல்லாமல் நானே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்த உறவினர்கள் இவ்வளவு நெருக்கத்தில் எப்படிப்போய் படம் எடுத்தாய் என்று ஆச்சரியப்பட்டனர்.

கஃபாவின் வாசல்






கஃபாவின் வாசல் சுத்தமான தங்கத்தினால் தயாரிக்கப்பட்டதாகும். தரை மட்டத்தில் இருந்து இரண்டு மீட்டர் உயரத்தில் இருக்கின்றது.அழகிய வேலைப்பாடும்,குர் ஆன் ஆயத்துகளும் பொறிக்கபட்ட இரட்டை கதவுகள்.இதற்கு படிகள் மூலமாக ஏறவேண்டும்.கூட்டம் காரணமாக எப்பொழுது மூடப்பட்டே இருக்கும் கதவுகள் வருடந்தோரும் நடைபெறும் சவூதியின் சர்வதேச குர்ஆன் மன‌னப்போட்டியில் கலந்து கொள்ளும் காரிக்கள், ஹாபிள்கள், விஷேட விருந்தினர்கள், சர்வதேசமட்டத்தில் பேசப்படும் அறிஞர்கள் போன்றோர் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்வுகளின் மாத்திரம் அது திறக்கப்படும்.அப்படித்திறக்கப்படும் பொழுது வெள்ளியால் ஆன ஏணிப்படிகள் பொருத்தப்பட்டு உபயோகிப்பார்கள்.


மகாமு இப்ராஹீம்


. (இதையும் எண்ணிப் பாருங்கள்; ‘கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்’ (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் ‘என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்’ என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம். (அல்குர்ஆன்2:125)

இப்ராஹீம்(அலை) அவர்கள் கஃபாவை எந்தக் கல் மீது நின்று கட்டினார்களோ அதனையே அல்லாஹ் இங்கு குறிப்பிடுகின்றான். அதைத் தொழும் இடமாக எடுத்துக் கொள்ளுங்கள் என அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டிருக்கின்றான். எந்த ஒரு ஹாஜியோ அல்லது உம்ராச் செய்பவரோ அல்லது தவாஃப் செய்பவரோ அவர்களின் தவாஃபை முடித்த பின் மகாமு இப்ராஹீமுக்குப் பின் (தவாஃபுக்காக) இரண்டு ரக்அத் தொழவேண்டும்.

நபி இப்றாஹீம் (அலை)அவர்களின் கால்தடமும் இங்கு பதிவாகி உள்ளது.


கஃபாவை சுத்தம் செய்தல்.




"சுத்தம் ஈமானில் பாதியாகும்"என்ற நபி மொழிகொப்ப ஹரம் ஷரீபில் 24 மணி நேரமும் எங்காவது ஒரு மூலையில் குழுவாக நின்று சுத்தம் செய்துகொண்டே உள்ளனர்.எப்படிப்பட்ட பெரும் கூட்டத்தையும் ஒரு ரிப்பன் கயிற்றினால் ஓரம் கட்டிவிட்டு கூட்டமாக மின்னல் வேகத்தில் ஊழியர்கள் சுத்தம் செய்வது ஆச்சரியமாக இருக்கும்.ஆங்காங்கு ஹரம்ஷரீபை சுத்தம் செய்வது அனைவர் பார்வையில் பட்டாலும் கஃப்துல்லாவை சுத்தம் செய்யும் பொழுது காணும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.கஃப்துல்லாவின் நிர்வாகிகள் முன்னிலையில் கஃபாவின் சுவர்களை கழுகி சுத்தம் செய்து கொண்டிருக்கும் ஊழியர்களைப்பாருங்கள்.


வெள்ளிக்கிழமை





புனித ஹரம் இருக்கும் இடத்துக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சாலை இது.வெள்ளிக்கிழமை அன்று அதிக கூட்டம் காரணமாக ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள சாலைகளில் அமர்ந்தும் தொழுகை புரியும் மக்கள் வெள்ளத்தைப்பாருங்கள்.இதே போல் ஹரத்தை சுற்றி இருக்கும் சாலைகள் அனைத்திலும் இதே சாலையோர தொழுகை நடைபெறுவது வாடிக்கை.ஜும்மா நேரத்தில் மட்டுமின்றி ஒவ்வொரு வேலை தொழுகைக்கு முன்னரும் ஹரத்தினை சுற்றி உள்ள சாலைகளை வாகனங்கள் செல்லமுடியாதவாறு அடைத்து விடுவார்கள்.


புறாக்கள்


மக்காவில் எங்கு பார்த்தாலும் புறாக்கூட்டம் லட்சக்கணக்கான புறாக்கள்.இருப்பினும் ஹரத்தின் மொட்டை மாடி கைப்பிடிகள்,சுற்றுவட்டாரம்,ஏன் தங்கி இருந்த ஹோட்டல் ரூமின் பால்கனிசுவர்கள் ஜன்னலோரங்கள் எதிலுமே புறா எச்சங்களை நான் பார்த்ததில்லை.இங்கு சென்னையில் நான் வசிக்கும் பகுதியிலும் புறா நடமாட்டமுண்டு.சொற்பபுறாக்க‌ள் நடமாட்டத்துக்கே பால் கனியில் ஜன்னலோரத்திலும் புறா எச்சங்கள் அசிங்க‌ப்படுத்தவதை ஒப்பீடு செய்து ஆச்சரியப்பட்டதுண்டு.ஒரு திடலில் புறாக்க‌ளுக்கு தீனி போட்டு மகிழ்கின்ற‌னர் மக்க‌ள் கூட்டம்.வீதியெங்கும் நெல் மணிகளும் கோதுமை மணிகளும் கொட்டிக்கிடக்க புறாக்கள் கொத்தித்தின்னும் அழகினைப்பாருங்க‌ள்.



மினா





சுமார் 30 லட்சம் ஹாஜிகள் கூடாரமடித்துத் தங்கக்கூடிய அளவு வசதி உள்ள பிரமாண்டமான மைதானம் இங்கே உள்ளது.சவுதி அரசாங்கம் தீ பிடிக்காத குளிர்சாதனவசதி உள்ள சுமார் 30 லட்சம் ஹாஜிகளுக்கு தேவையான கூடாரங்களை தண்ணீர் வசதியுடன் ஏற்படுத்தித்தந்திருக்கின்றது.இங்கு படுக்கை இரண்டடி அகலம் ஆறடி நீளம் கொண்டது ஒவ்வொரு ஹாஜிக்கும் ஒதுக்கப்பட்டு இருக்கும் இடமாகும்.ஒரு கூடாரத்தினுள் சுமார் 60 முதல் 100 பேர் வரை தங்கக்கூடியதாக இருக்கும். இதனுள்ளே 5நாட்கள் தங்கி இருந்து உண்டு உற‌ங்கி தொழுது பிரராத்தனை செய்து கொண்டிருக்க வேண்டும்.


சவுதி அரசாங்கத்தால் 30 லட்சம் ஹாஜிகளுக்கு மேல் தங்கக்கூடிய கூடாரங்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும் வீதிகளில் தற்காலிகமாக கூடாரங்கள் அமைத்து ஹஜ் கிரியைகளை செய்யும் ஹாஜிகளைப்பாருங்கள்.அந்த கூடார‌மே இன்றி வானமே கூரையாக நினைத்து ஐந்து நாட்களும் தெருவோரத்தில் குழந்தைகளுடன் தங்கி இருந்து ஹஜ்ஜை நிறைவேற்றும் ஹாஜிகளும் உண்டு.  

ஆயிரக்கணக்கில் இருக்கும் மினா கூடாரங்கள்



சுமார் 30 லட்சம் ஹாஜிகள் கூடாரமடித்துத் தங்கக்கூடிய அளவு வசதி உள்ள பிரமாண்டமான மைதானம் இங்கே உள்ளது.சவுதி அரசாங்கம் தீ பிடிக்காத குளிர்சாதனவசதி உள்ள சுமார் 30 லட்சம் ஹாஜிகளுக்கு தேவையான கூடாரங்களை தண்ணீர் வசதியுடன் ஏற்படுத்தித்தந்திருக்கின்றது.லட்சக்கணக்கான மக்கள் தங்கி இருந்து கடமைகளை நிறைவேற்றி விட்டு திரும்பியவுடன் சுத்தம் செய்யப்பட்ட மினா டெண்டுகள்.கூட்டம் கூட்டமாக மனிதத்தலைகள் குவிந்த இடம் பிறகு ஆள் அரவமின்றி வெறிச்சோடு உள்ளது

நடச்சத்திர டெண்ட்


இது நட்சத்திர‌ டெண்ட்.வி ஐ பிக்களுக்குறியது.சீரியல் பல்புகளும்,அலங்காரத்தோரணங்களும்,சிகப்பு கார்பெட்டும் இருக்கைகளும் இன்னும் பற்பல வசதிகள் அமையபெற்ற டெண்ட் வாசலில் காவலாளி துணையுடன்.



அரபா

ஹஜ்ஜின் முக்கிய கிரியைகள் நிறைவேறும் இடம்.ஹஜ்ஜின் முக்கிய தினமான அரபா தினத்தன்று ஹஜ்ஜாளிகள் அனைவரும் இங்கு ஒன்று கூடி இறைவனிடன் தொழுது பிரார்த்தனை புரிவார்கள்.தூரத்தே காணும் மலை உச்சியில்தான் ஆதம்(அலை)ஹவ்வா (அலை) இருவரும் முதன் முதலில் பூமியில் சதித்துக்கொண்ட இடமாகும்.

முஸ்தலிஃபா 




முஸ்தலிஃபா என்பது மினாவுக்கும்,அரஃபாத்துக்கும் இடையில் உள்ள ஒரு இடமாகும்.துல் ஹஜ் மாதம் 9,10 ஆவது நாள்களுக்கு இடையே உள்ள இரவில் ஹாஜிகள் இங்கே தங்க வேண்டும்.நடு ரோட்டின்  மேல் அமர்ந்து இரவு முழுதும் பிரார்த்தனையில் ஈடு படவேண்டும்

அங்கே ஹாஜிகள் 70 பொடிக் கற்களைப் பொறுக்கிக்கொள்ள வேண்டும்.பாலைவனம் நிறைந்த அந்த நாட்டில் முஸ்தலிஃபாவில் மட்டும் எங்கு பார்த்தாலும் பொடிக்கற்களாவே தென் படுகின்றன.ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ஹாஜிகள் கல் பொறுக்குகின்றனர்.கல் பற்றாக்குறை வருவதே இல்லை.இது அல்லாஹ்வின் அற்புதமாக உள்ளது.இந்த இடம் துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதில் விஷேஷ அந்தஸ்த்தைப்பெறுகின்றது.

முஸ்தலிஃபாவில் தங்கிய ஹாஜிகள் அனைவரும் மினாவை நோக்கி நகர்ந்து செல்வர்,அப்போது ஒரே மைதானத்தில் ஹாஜிகள் அனைவரையும் பார்க்கும் பொழுது மறுமை நாளில் அல்லாஹ்வுக்கு முன்னால் எல்லா மனிதர்களும் நிறுத்தப்படும் காட்சி நினைவுக்கு வரும்.


கற்கள்

முஸ்தலிபாவில் பொறுக்கபட்ட கற்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக