WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

உணர்வும் அதன் உண்மையும் !


உணர்வும் அதன் உண்மையும் !

Posted by nidurali | Labels: , | Posted On Tuesday, April 10, 2012 at 7:38 PM

காண்பதும், படிப்பதும், எழுதுவதும் உணர்வைத் தூண்டக்  கூடியதாக அமைவதனைக் காண முடிகின்றது. உணர்வு இல்லாமல் மனிதன் இருக்க முடியாது. அந்த உணர்வுக்கு நாம் கொடுக்கும் மதிப்பு வேறுபடுகின்றது. பாதகமான,தவறான உணர்வுகளை   தூண்டக்  கூடிய காட்சிகளும் எழுத்துகளும் தடுக்கப்பட வேண்டும்.அது மக்களுக்கு பல் வகையில் கேடுகளை தந்து பாதகமான் விளைவுகளை உண்டாக்கி விடுகின்றது.  மித மிஞ்சிய உணர்ச்சியும் , உணர்வும் உடல் நலத்தினையும் பாதிக்கும். உணர்வை முறையான வகையில் வெளிப்படுத்த வேண்டும். அது கேலிக்கு இடம் தந்ததாக அமைந்து விடக் கூடாது . மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல்,புரிந்துக்கொள்ளாமல் செயல்படுவது எத்தனை மடத்தனம். இறந்தவர் வீட்டுக்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் சொல்லாமல் மற்றவர்களுடன் சிரித்துப்  பேசி உணர்ச்சி சிதறிப் போகும் நிலையை உருவாக்கி இருக்கும் இடத்திற்கு தகுந்ததுபோல் நடந்துக் கொள்ளாமல் தங்களது உணர்வு சிதறிப் போக முனைபவர்களைப் பார்க்க முடியும். சூழ்நிலைகளுக்கு   பொருத்தமற்ற விதத்தில் நடந்துக் கொள்வது உணர்வுபூர்வமாக படிப்பறிவில்லாத அறிவில்லாதவராக அவர் மற்றவருக்கு காட்சி தந்து அவரை மற்றவர்கள் கேவலமாக மதிக்கின்றனர்


  உண்ணும் உணவு உடம்போடு கலந்து உடலை உந்தச் செய்ய வழி வகுப்பதுபோல் உணர்வும் உடம்போடு கலந்துவிட வேண்டும் .அது நன்மை தரக்கூ டிய  உணர்வாக இருப்பது அவசியம். இறைவன் மீது பற்று வைத்து அது  இறை  உணர்வாக உடம்பில் கலக்க வேண்டும். நம்முள் இறைவன் இருக்கிறான் என்பதை உணர வேண்டும். அது நல்லுணர்வை உண்டாக்கும் .அது அன்பு, பக்தி, சந்தோசம், பரிவு, பெருந்தன்மை, மன்னிக்கும் குணம் முதலியவைக்கு வழி  வகுக்கும் . இறை உணர்வு உள்ளோர் மக்கள் மீது பற்றுக் கொண்டு தன்னிடத்து நல்லுணர்வை உண்டாக்கிக் கொள்வதுடன் மக்களைப் புரிந்துக் கொண்டு அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து சேவை  செய்ய  முற்பட்டு மனமகிழ்வார்கள்.  

நபிகள் நாயகம் (ஸல்..) அவர்கள் கூறினார்கள்: 'மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்'.நூல்: ஸஹீஹ் புஹாரி - 7376 

இதுவே உணர்வின் மகத்துவம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக