WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

செவ்வாய், 13 டிசம்பர், 2011

ஈரான் அதிபர் Ahmadinejad மீது 'செருப்பு ' வீச்சு!



on 13 December 2011.
ஈரான் அதிபர் மகமூத் அகமதினேஜாத். சில நாட்களுக்கு முன்பு இவர் வடமேற்கு பகுதியில் உள்ள உருமியே நகருக்கு சென்று இருந்தார். அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்று கொண்டிருந்தார்.


அப்போது ரோட்டோரம் கூட்டத்தில் நின்ற நபர் ஒருவர் தான் அணிந்திருந்த ஷூவை கழற்றி அதிபர் அகமதினேஜாத் மீது வீசினார். ஆனால் அது அவர் மீது விழவில்லை.கார் மீது விழுந்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.




உடனே அவரது பாதுகாவலர்கள் ஷூ வீசியவரை கூட்டத்தில் தேடினார்கள். ஆனால் அவர்களால் அந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை.




சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மீது முன்டாசர் அல்-ஷாய்தி என்ற பத்திரிகை நிருபர் ஷூவை கழற்றி வீசினார். அப்போது அவரை ஹீரோ என ஈரான் அரசு வானளாவ புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஏமன் சிறைச்சாலையில் இருந்து 15கைதிகள் தப்பியோட்டம்!





ஏமன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப் பட்டிருந்த 16க்கும் அதிகமான கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. ஏமனின் தென் பிராந்தியத்தில் உள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அல்கைதா இயகத்தினரும் தப்பிச்சென்றவர்களுள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து இவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. சிறைச்சாலையில் உள்ள அல்கைதா இயக்கத்தினர் தப்பிச்சென்ற இரண்டாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.




ஏமன் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் ஒரு புறம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், இது போன்ற சம்பவங்களும் அதிகரித்துவருகின்றன.

குழந்தையை கடத்தி கொலுசு, கம்மல் பறிப்பு



 

மந்தைவெளியை சேர்ந்தவர் தங்கமணி (32), இவரது மனைவி முனியம்மாள். இவர்களுக்கு பரணி (3), திவ்யா (2) என மகன், மகள் உள்ளனர்.

தங்கமணி உறவினரின் திருமண நிச்சயதார்த்தம், தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. அதில் பங்கேற்க தங்கமணி, தனது மனைவி, குழந்தைகளுடன் சென்றார். அங்கு வந்திருந்த குழந்தைகளுடன் பரணியும், திவ்யாவும் விளையாடிக் கொண்டிருந்தனர். இரவு 9 மணியளவில் திடீரென திவ்யாவை காணவில்லை. அதிர்ச்சியடைந்த தங்கமணி, பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவள் காலில் கொலுசும், காதில் கம்மலும் அணிந்திருந்தாள். இதுகுறித்த புகாரின் பேரில், தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையே, எண்ணூரை சேர்ந்த இதய நோயாளி யமுனா (60), ஸ்டான்லி மருத்துவமனையில் மாத்திரை வாங்க நேற்று வந்துள்ளார். காலை 11 மணியளவில் ஒரு ஆசாமி அவரிடம் குழந்தையை கொடுத்து, ‘கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ளுங்கள், ஓ.பி. சீட் வாங்கிக்கொண்டு வருகிறேன்’ என்று கூறிவிட்டு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அந்த ஆசாமி வரவில்லை.

இதையடுத்து பிற்பகல் 3 மணியளவில், ஸ்டான்லி மருத்துவமனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் மல்லிகார்ஜூன், தமிழ்ச்செல்வன் ஆகியோரிடம் சென்று குழந்தையை யமுனா கொடுத்துள்ளார். ஏற்கனவே குழந்தை காணவில்லை என்று போலீசா ருக்கு மைக்கில் தகவல் வந்திருந்ததால், தண்டையார்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, குழந்தையின் பெற்றோர் தங்கமணி, முனியம்மாள் ஆகியோருடன் அங்கு வந்தார். குழந்தையை பார்த்ததும் பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

மூதாட்டி யமுனா கூறிய அடையாளத்தின் அடிப்படையில் அந்த ஆசாமியை போலீசார் வலைவீசி தேடுகின்றனர். குழந்தையின் வெள்ளிக்கொலுசு, தங்க கம்மல் ஆகியவற்றை காணவில்லை. ‘‘நகை போனாலும் பரவாயில்லை, குழந்தை கிடைத்ததே போதும்’’ என்று பெற்றோர் கூறிவிட்டுச் சென்றனர்.

குழந்தைகளை குறிவைக்கும் கும்பல்

ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில், கடந்த வாரம் பிறந்த ஆண் குழந்தையை ஒரு பெண் கடத்த முயன்றார். அதேபோல், வியாசர்பாடி மாநகராட்சி மருத்துவமனையில் பிறந்த சில மணி நேரத்தில் ஆண் குழந்தையை ஒரு பெண் கடத்திச் சென்றார். போலீசாரின் தேடுதல் வேட்டையில் அந்த பெண்ணும், குழந்தையும் சிக்கினர். குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுபோன்று, குழந்தைகளை குறிவைத்து கடத்தப்படும் சம்பவங்கள், சமீபகாலமாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

கணவர் எனக் கருதி வேறொருவருடன் பைக்கில் சென்ற பெண்


கணவர் எனக் கருதி வேறொருவருடன் பைக்கில் சென்ற பெண்!

Font size:
கணவர் எனக் கருதி வேறொருவருடன் பைக்கில் சென்ற பெண்! ஹெல்மட்ட்டால் நெல்லையில் ஒரு பெரும் குழப்பம் ஏற்பட்டு விட்டது. கணவர் என நினைத்து இன்னொருவருடன் பைக்கில் ஏறிப் போய் விட்டார் ஒரு பெண். பாதி வழியில்தான் குழப்பம் புரிந்து வண்டியை நிறுத்தி இறங்கி தனது கணவரை அழைத்து அவருடைய வண்டியில் அவர் சென்றார். தமிழகத்தில் ஹெல்மட் அணிவது கட்டாயம் என்று சட்டம் உள்ளது. இருப்பினும் இது 90 சதவீதம் பேர் பின்பற்றுவதில்லை. அவ்வப்போது மாநகரங்களில் ஹெல்மட் அணிவதை கட்டாயப்படுத்தி போலீஸார் நடவடிக்கைக எடுக்கின்றனர். பின்னர் இது தொய்வடைந்து போய் விடுகிறது.
இந்த நிலையில் நெல்லையில் தற்போது ஹெல்மட்டை கட்டாயமாக்கியுள்ளனர். இதனால் ஒரு பெரும் குழப்பம் ஏற்பட்டு விட்டது. நேற்று இரவு நெல்லை டவுன் பகுதியில் மின்தடை அமலில் இருந்தது. அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் பலர் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தனர். ஹெல்மட் அணிந்திருந்த ஒருவர் தனது மனைவியுடன் பெட்ரோல் போட வந்திருந்தார். கணவர் பெட்ரோல் போடுவதற்காக வண்டியை நிறுத்தியபோது மனைவி கீழே இறங்கி அருகில் காத்திருந்தார். அவருக்கு அருகே இரண்டாவது நபர் தனது மனைவியுடன் பெட்ரோல் போட வந்திருந்தார். அவரது மனைவியும் இறங்கி நின்றார். இருவரது வாகனங்களும் ஒரே வாகனம்.

இந்த நிலையில் பெட்ரோல் போட்டு முடித்த முதல் பைக் காரர், மனைவியை வண்டியில் ஏறுமாறு கூறியுள்ளார். அப்போது அதைக் கேட்ட இரண்டாவது வண்டியில் வந்த பெண்மணி, தனது கணவர்தான் கூப்பிடுகிறார் என்று நினைத்து முதலாமவரின் வண்டியில் ஏறி அமர்ந்தார். பின்னர் முதலாமவர் கிளம்பிச் சென்றார்.
இந்த நிலையில் பெட்ரோல் போட்டு முடித்த 2வது நபர், தனது மனைவியைக் காணாமல் திடுக்கிட்டார். எங்கு போனார் என்பது தெரியாமல் செல்போனில் தொடர்பு கொண்டார். முதலாவமரின் பைக்கில் போய்க் கொண்டிருந்த 2வது நபரின் மனைவி, செல்போனை எடுத்துப் பார்த்தபோது அது தனது கணவர் என்று தெரிந்தது. பைக் ஓட்டிக் கொண்டிருக்கும்போதே எதற்குப் போன் என்று கணவரிடம் கேட்க, அவரோ, நான் எப்போது செய்தேன் என்று கூற குரல் வேறு மாதிரியாக இருந்ததால் இருவரும் குழப்பமடைந்து வண்டியை நிறுத்தியுள்ளனர்.
ஹெல்மட்டைக் கழற்றிய பிறகுதான் அது வேறு நபர் என்று தெரிந்து அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார். பிறகுதான் குழப்பம் எப்படி வந்தது என்பது புரிந்தது. இதையடுத்து பெட்ரோல் பங்க்கில் காத்திருந்த கணவரை செல்லில் தொடர்பு கொண்டு நடந்த குழப்பத்தைக் கூறி வரவழைத்தார் முதல் பெண். அவரும் விரைந்து வந்து தனது மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பினார். தனது நிஜமான மனைவியை பெட்ரோல் பங்க்கிலேயே விட்டு விட்டு்ச் சென்ற முதல் நபரும் வேகமாக அங்கு சென்று அங்கே பரிதவிப்புடன் காத்திருந்த தனது மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனார்.

நிர்வாணமாக நடை பழகும் ஜோடிகள் (படங்கள் இணைப்பு)


நிர்வாணமாக நடை பழகும் ஜோடிகள் (படங்கள் இணைப்பு)

Font size:
நிர்வாணமாக நடை பழகும் ஜோடிகள் (படங்கள் இணைப்பு) அட இந்த பாழாய்போன நாகரிகம் எங்கு போய் முடியப்போகிறதோ தெரியவில்லை.. இப்பொழுதெல்லாம் நிர்வாணமாக இருப்பதையே சாதனையாக மேற்கொள்ளுகின்றார்கள் ஆண்களும் பெண்களும். அந்தளவுக்கு மாறிப்போய்விட்டது இன்றைய உலகம். கற்பு என்றால் என்ன என்று தெரியாதவர்கள் மேலைத்தேய நாட்டவர்கள். இவர்கள் செய்யும் பல கில்மா விடயங்களில் ஒன்றுதான் இதுவும்.  மனிதன் மானத்தை காப்பாற்ற எத்தனையோ விதவிதமான ஆடைகளை கண்டுபிடித்திருக்க நிர்வாணமாக வீதியில் நடை பயில்கிறார்கள் ஆண்களும் பெண்களும்.  உடலில் முழுக்க தமது அந்தரங்க உறுப்புக்களை வர்ணங்களால் பூசி வீதியில் நடந்து செல்கிறார்கள்.  படங்களை மேலோட்டமாக பாருங்கள் உற்றுப்பார்த்திராதீர்கள்…
-
-
-

உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்!


உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்!

Font size:
உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! இறைவனின் படைப்பில் எத்தனை எத்தனை விசித்திரங்கள்தான். சில படைப்புக்களை பார்க்கும் போது நமக்கு கண்களில் நீர் ததும்ப ஆரம்பிக்கிறது. அவ்வாறான ஒரு சோகமான செய்தியே இது. வியட்நாம் நாட்டைச்சேர்ந்த 35 வயதான பெண்மணி தஹ் திசாலீ எனும் பெண்மணி. அவருக்கு இறைவன் கொடுத்திருக்கு சோதனை மிகக்கொடியது. முகம் உள்ளிட்ட அனைத்த பாகங்களிலும் ஏராளமாட குட்டைகள் அல்லது குமிழிகள் போன்று காணப்படுகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட அவர் தனது கல்வியை கூடி தொடர முடியாமல் இருந்ததாக வேதனைப்படுகிறார். மிகுந்த ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவரால் அதிக பணம் செலவு செய்து சிகிச்சையும் செய்து கொள்ள முடியவில்லை. தனது இந்த விகாரமான தோற்றத்தால் வெளியுலகம் தெரியாமல் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிடுகிறார்.

இவரின் வேதனை தாங்க முடியாத பெற்றோர் பல முயற்சிகளின் பின்னர் வியட்நாமின் மருத்துவமனை ஒன்றை அணுகிய போது அங்கும் இவருக்கு விடிவு காலம் பிறக்கவில்லை என்பதே இன்னும் சோகமான சம்பவம். இவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இந்த நோய் குறித்து தாங்களால் சரியாக எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் இது ஒரு மரபணு குறைபாட்டினால்தான் ஏற்பட்டிருக்க கூடும் எனவும் தெரிவித்தார்கள். எனினும் இதனை அறுவைச்சிகிச்சை செய்து அகற்ற முடிந்தாலும் இவை மீண்டும் வளர வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்கள். இதற்கு முன்னரும் இவ்வகை நோயினால் பாதிக்கப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்து குட்டைகள் நீக்கப்பட்ட இருவருக்கு எதிர்பாராத விதமாக மீண்டும் அதிகளவாக குமிழிகள் தோன்றியதாக வைத்தியர்கள் குறிப்பிட்டனர். எது எப்படியோ அழகு என்பது அங்கத்தில் அல்ல அகத்தில்தான் என்ற ஒரே வாசகத்தை தவிர இந்தப்பெண்ணுக்கு எந்த சொல்லும் ஆறுதல் ஆகாது.


© 2011 puthiyaulakam.com

சீட்டு விளையாட்டில் தோல்வி : நிர்வாணமாக வீடு சென்ற பெண்!!


சீட்டு விளையாட்டில் தோல்வி : நிர்வாணமாக வீடு சென்ற பெண்!!

Font size:
சீட்டு விளையாட்டில் தோல்வி : நிர்வாணமாக வீடு சென்ற பெண்!! போலந்து நாட்டில் எல்க் எனும் 45 வயது நிரம்பிய பெண்மணி ஒருவர் வீதியில் நிர்வாணமாக நடந்து சென்றதால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :- சீட்டு கட்டு விளையாடும் பழக்கம் உள்ளவர் எல்க் என்ற இந்த பெண்மணி. இவ்வாறு சீட்டு விளையாட்டில் தான் தோல்வியை தழுவியதனால் வீட்டுக்கு செல்ல ஆயத்தமான இந்த பெண் வீடுவரை நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார். இது தொடர்பாக பொலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பெண்ணை கைது செய்த பொலீசார் அவரை 30 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர்.
-
-
-