உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்!
written by varsha on December 
12th, 2011 |   No Comments
 இறைவனின் படைப்பில் எத்தனை எத்தனை விசித்திரங்கள்தான். சில படைப்புக்களை 
பார்க்கும் போது நமக்கு கண்களில் நீர் ததும்ப ஆரம்பிக்கிறது. அவ்வாறான ஒரு சோகமான 
செய்தியே இது. வியட்நாம் நாட்டைச்சேர்ந்த 35 வயதான பெண்மணி தஹ் திசாலீ எனும் 
பெண்மணி. அவருக்கு இறைவன் கொடுத்திருக்கு சோதனை மிகக்கொடியது. முகம் உள்ளிட்ட 
அனைத்த பாகங்களிலும் ஏராளமாட குட்டைகள் அல்லது குமிழிகள் போன்று காணப்படுகிறது. 
இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட அவர் தனது கல்வியை கூடி தொடர முடியாமல் இருந்ததாக 
வேதனைப்படுகிறார். மிகுந்த ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவரால் அதிக பணம் செலவு 
செய்து சிகிச்சையும் செய்து கொள்ள முடியவில்லை. தனது இந்த விகாரமான தோற்றத்தால் 
வெளியுலகம் தெரியாமல் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிடுகிறார்.
 
இறைவனின் படைப்பில் எத்தனை எத்தனை விசித்திரங்கள்தான். சில படைப்புக்களை 
பார்க்கும் போது நமக்கு கண்களில் நீர் ததும்ப ஆரம்பிக்கிறது. அவ்வாறான ஒரு சோகமான 
செய்தியே இது. வியட்நாம் நாட்டைச்சேர்ந்த 35 வயதான பெண்மணி தஹ் திசாலீ எனும் 
பெண்மணி. அவருக்கு இறைவன் கொடுத்திருக்கு சோதனை மிகக்கொடியது. முகம் உள்ளிட்ட 
அனைத்த பாகங்களிலும் ஏராளமாட குட்டைகள் அல்லது குமிழிகள் போன்று காணப்படுகிறது. 
இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட அவர் தனது கல்வியை கூடி தொடர முடியாமல் இருந்ததாக 
வேதனைப்படுகிறார். மிகுந்த ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவரால் அதிக பணம் செலவு 
செய்து சிகிச்சையும் செய்து கொள்ள முடியவில்லை. தனது இந்த விகாரமான தோற்றத்தால் 
வெளியுலகம் தெரியாமல் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிடுகிறார்.
இவரின் வேதனை தாங்க முடியாத பெற்றோர் பல முயற்சிகளின் பின்னர் வியட்நாமின் மருத்துவமனை ஒன்றை அணுகிய போது அங்கும் இவருக்கு விடிவு காலம் பிறக்கவில்லை என்பதே இன்னும் சோகமான சம்பவம். இவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இந்த நோய் குறித்து தாங்களால் சரியாக எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் இது ஒரு மரபணு குறைபாட்டினால்தான் ஏற்பட்டிருக்க கூடும் எனவும் தெரிவித்தார்கள். எனினும் இதனை அறுவைச்சிகிச்சை செய்து அகற்ற முடிந்தாலும் இவை மீண்டும் வளர வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்கள். இதற்கு முன்னரும் இவ்வகை நோயினால் பாதிக்கப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்து குட்டைகள் நீக்கப்பட்ட இருவருக்கு எதிர்பாராத விதமாக மீண்டும் அதிகளவாக குமிழிகள் தோன்றியதாக வைத்தியர்கள் குறிப்பிட்டனர். எது எப்படியோ அழகு என்பது அங்கத்தில் அல்ல அகத்தில்தான் என்ற ஒரே வாசகத்தை தவிர இந்தப்பெண்ணுக்கு எந்த சொல்லும் ஆறுதல் ஆகாது.


© 2011 puthiyaulakam.com



 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக