WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

புதன், 14 டிசம்பர், 2011

டிஜிட்டல் விபச்சாரம்! அதிர்ச்சித் தகவல்!! எச்சரிக்கை ரிப்போர்ட்



தற்கால உலகில் அதி வேகமாகப் பரவி மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்று வருகின்றது இணையம். இணையம் மக்களுக்கு நல்ல விடயங்களை எடுத்துச் சென்றாலும் கூட இளைய தலைமுறைகளை சின்னாபின்னமாகச் சீரழித்து அவர்களின் வாழ்க்கையை குழிதோண்டிப் புதைக்கின்றது.

இதற்குக் காரணம் பெற்றோர்கள். பிள்ளைகள் கணனி முன் அமர்ந்து கல்வி பயில்கின்றார்கள் என்ற நினைப்புடன் நிம்மதிப் பெருமூச்சு விடும் பெற்றோர்களின் பிள்ளைகள் இணையம் மூலம் தங்களது கன்னித் தன்மைகளையிழந்து வருகின்றனர். வெளிநாட்டு நிறுவனங்கள் இவ்வாறு சமூகத்தைச் சீரழிக்கும் சில இணையத்தளங்களை உலாவ விடுவது, அவர்களின் கலாசாரத்திற்கு அது ஒத்துழைக்குமே தவிர எமது கலாசாரத்திற்கும் அதற்கும் வெகுதூரம்.

இருந்தும் எமது இளம் சமுதாயம் அதனை நோக்கித்தான் தற்போது முன்னேறி வருகின்றது. இதனால் எம் கலாசாரம் காலாவதியாகி விடும் அபாயம் அண்மித்துக் கொண்டிருக்கின்றது. இது இவ்வாறிருக்க சட் றூம் என்று சில கேடிகளால் உதயம் பெற்றிருக்கும் இவ்வாறான வலைதளங்கள், பல குடும்பங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் அளவுக்கு அதன் பாவனைகள் அதிகரித்துள்ளது.

கருமாதியைத் தவிர அனைத்திற்க்கும் சேவை வரி! மக்களே உஷார்!



சேவைகள் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 63% ஆக இருக்கின்றன. சேவை வரியை மேலும் மேலும் சேவைகளுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் வரி வருமானம் 20% அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தற்போது பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ள இன்னின்ன சேவைகளுக்கு 10% வரி என்று இருக்கும் சட்டத்தை மாற்றி, புதிதாக வெளியிடப்படும் ‘எதிர்மறை’ பட்டியலில் இல்லாத அனைத்து சேவைகளுக்கும் 10% (அல்லது எதிர்காலத்தில் நிர்ணயிக்கப்படும் வீதத்தில்) வரி என்பது விரைவில் அமலுக்கு வரப் போகிறது.
எதிர்மறை பட்டியல் அடிப்படையிலான சேவை வரிக்கான அறிவிப்பு நவம்பர் 17 அன்று வெளியிடப்பட்டது. “சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் எவரும் வரிக்குட்பட்ட நபர் என்று வரையறுக்கப்படுகிறார். அவரது நடவடிக்கை லாப நோக்கத்தில் செய்யப்பட்டாலும் சரி, இலாப நோக்கம் இன்றி செய்யப்பட்டாலும் சரி, வரி வசூலித்துக் கட்ட வேண்டியது அவர் பொறுப்பு. கூடவே எந்த ஒரு நடவடிக்கையையும் சேவை என்று அறிவிக்க அரசாங்கத்துக்கு உரிமை இருக்கிறது”

சேவை வரி, விற்பனை வரி போன்ற மறைமுக வரிகள் நுகர்வோரிடமிருந்து நிறுவனங்களால் வசூலிக்கப்பட்டு அரசாங்கத்துக்கு செலுத்தப்பட்டு விடுகின்றன. அந்த வகையில் இந்த சேவை வரிச்சுமையை அன்றும் இனியும் சுமப்போர் மக்கள்தான்.

நிறுவனங்களில் லாபத்தின் மீது அல்லது தனி நபரின் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வருமான வரி போன்ற நேர்முக வரிகளைப் பொறுத்த வரை வரி செலுத்த வேண்டிய பொறுப்பு வரி கட்ட வேண்டியவரிடமே இருக்கிறது. நிறுவனங்களின் லாபத்தின் மீதான கார்பொரேட் வருமான வரி முதலாளிகளின் வருமானத்தில் கை வைப்பது. அதை எத்தனை வழிகளில் ஏய்க்க முடியுமோ அத்தனை வழிகளிலும் அவர்கள் கில்லாடிகளாக இருப்பதால், அரசாங்கம் கெஞ்சிப் பார்த்தும் முடியாமல், வரி வீதத்தை வெகுவாகக் குறைத்து, தயவு செய்து வரி செலுத்தும்படி முதலாளிகளை அடிபணிந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு மேல் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல வரிச்சலுகை அவர்களுக்கு தரப்படுகிறது.

உதாரணமாக ஒருவரது மாதாந்திர தொலைபேசி கட்டணம் 900 ரூபாய் என்றால் அதில் செலவுகள் போக நிறுவனத்துக்குக் கிடைக்கும் லாபம் 10% ஆக இருக்கலாம் (90 ரூபாய்). அதாவது, நிறுவனத்தின் எல்லா செலவுகளும் போக அனில் அம்பானிக்கு வழங்கப்படும் பல லட்ச ரூபாய் இயக்குனர் சம்பளம், முதலீடாக வாங்கி வைத்த கருவிகளின்/இயந்திரங்களின் தேய்மானம், வங்கியில் வாங்கிய கடனுக்கு கட்டும் வட்டி உள்ளிட்ட எல்லா செலவுகளும் கழித்த பிறகு 90 ரூபாய் லாபம். அந்தவகையில் இலாபத்திற்கு முன்பாகவே மறைமுக இலாபம் முதலாளிகளுக்கு போய்ச்சேருகிறது.

அந்த 90 ரூபாயில் 33% கார்பொரேட் வருமான வரி விதித்தால் அரசுக்குக் கிடைப்பது சுமார் 30 ரூபாய். இதன் மூலம் அரசாங்க வரி வருமானத்தை உயர்த்த வேண்டுமானால் வரி வீதத்தை 50% (45 ரூபாய்) அல்லது 80% (72 ரூபாய்) ஆக்க வேண்டியிருக்கும். நம் அதியமான் சொல்வது போல அது முதலாளிகள் மீது தாங்க முடியாத பாரத்தைச் சுமத்தி அவர்களை வரி ஏய்க்கத் தூண்டி விடும். அத்தகைய கஷ்டத்தை முதலாளிகளுக்குக் கொடுக்க விரும்பாமல் அரசு உச்சபட்ச கார்பொரேட் வருமான வரியை சுமார் 33%ஆக வைத்திருக்கிறது. இதுதான் 80களுக்கு முன்பு 90% ஆக இருந்த அதிகபட்ச வருமான வரி வீதம் இப்போது 33% ஆக குறைந்த கதை.

அதிகரித்துக் கொண்டே வரும் அரசு செலவுகளுக்கு வேறு என்னதான் வழி? இங்குதான் வருகின்றன சேவை வரி போன்ற வரிகள். அவை நுகர்வோரின் மடியிலிருந்து நேரடியாக பணத்தைப் பிடுங்கி அரசுக்குக் கொண்டு சேர்ந்து விடும்.

மேலே சொன்ன தொலைபேசி பில்லில் கட்டணத்துக்குக் கீழே சேவை வரி என்று தனியாக கணக்கிட்டு இதை வசூலித்திருப்பார்கள். 900 ரூபாய் மாதாந்திர கட்டணத்தில் சேவை வரியாக 10%யும் கூடுதல் கட்டணம் 0.3% சேர்த்து 993 ரூபாய் ஆக பில் வந்திருக்கும். நிறுவனத்தின் லாபத்திற்கு பங்கம் இல்லாமல் நேரடியாக பயனாளரிடமிருந்து வசூலிக்கப்பட்டு அரசாங்கத்துக்குப் போய்ச் சேர்ந்து விடுகிறது. ‘வரி ஏய்க்கப்பட்டு விடுமே’ என்று பயப்படத் தேவையில்லை!

சுமக்கப் போவது நேர்மையான பொதுமக்கள்!

வசூலிக்கப் போவது லாபத்தில் பாதிப்பு ஏற்படாத நேர்மையாக இருக்க முடியாத கார்பொரேட்!

வருமானம் வருவது அரசாங்கத்துக்கு!

கார்பொரேட் லாபத்துக்கு 90% வரி விதித்து முதலாளிகளை கொடுமைப்படுத்துவதை விட, மொத்தக் கட்டணத்தில் 10% சேவை வரி விதித்து பொதுமக்களிடமிருந்து நோகாமல் நொங்கு நோண்டி கொள்கிறார்கள் இந்த ‘மக்கள் நல’ அரசுகள்.

“சேவைகளை வரி விதிப்பிலிருந்து விட்டு வைப்பதற்கு உறுதியான காரணம் எதுவும் இல்லை. பொருட்களின் விற்பனைக்கு வரி விதிக்கப்படும் போது, பல நாடுகளில் பொருட்கள் விற்பனையும் சேவை விற்பனையும் வரி விதிப்பைப் பொறுத்த வரை ஒரே மாதிரி கருதப்படும் போது நமது நாட்டிலும் சேவைகளின் மீது வரி விதிக்க என்ற திசை நோக்கிய பயணத்தின் எளிய துவக்கமாக, தொலைபேசி, ஆயுள் காப்பீடு தவிர்த்த காப்பீடு, மற்றும் பங்கு தரகர்களின் சேவைகளின் மீது இந்த நிதியாண்டு முதல் 5% வரி விதிக்கப்படுகிறது”

1994-95க்கான நிதிநிலை அறிக்கையை அறிமுகப்படுத்தி, அப்போதைய நிதி அமைச்சர், கடந்த 20 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைத்து இந்தியாவை வல்லரசாக்கிய மாமேதை மன்மோகன் சிங், இப்படி சேவை வரியை இந்திய மக்களுக்கு அறிமுகம் செய்தார். 3 சேவைகளின் மீது 5% வரி என்று ஆரம்பித்த சேவை வரி இப்போது 119 சேவைகளின் மீது 10% ஆக உயர்ந்திருக்கிறது.


நிதியாண்டு
வருமானம்(கோடி ரூபாய்)
முந்தையஆண்டை விட அதிகரிப்பு
சேவைகளின்எண்ணிக்கை
வரிகட்டுபவர்களின் எண்ணிக்கை
முந்தையஆண்டை விட அதிகரிப்பு.
1994-95
410
    Base Year
3
3,943
      Base Year
1995-96
846
106.00
6
4,866
23.41
1996-97
1,022
21.00
6
13,982
187.34
1997-98
1,515
48.00
18
45,991
228.93
1998-99
1,787
18.00
26
107,479
133.70
1999-00
2,072
16.00
26
115,495
7.45
2000-01
2,612
23.00
26
122,326
5.91
2001-02
3,305
26.00
41
187,577
53.34
2002-03
4,125
25.00
52
232,048
23.71
2003-04
7,890
91.00
62
403,856
74.04
2004-05
14,196
80.00
75
774,988
91.89
2005-06
23,053
62.00
84
846,155
9.18
2006-07
37,482
63.00
99
940,641
11.17
2007-08
51,133
36.00
100
1,073,075
14.08
2008-09
60,702
19.00
106
1,204,570
8.78
2009-10
58,319
-3.93
117
1,307,286
8.53

கதை இன்னும் முடியவில்லை, இனிமேல்தான் சுவராஸ்யம் ஆரம்பிக்க இருக்கிறது.

எதிர்மறை பட்டியல் அடிப்படையிலான சேவை வரிக்கான அறிவிப்பு நவம்பர் 17 அன்று வெளியிடப்பட்டது. “சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் எவரும் வரிக்குட்பட்ட நபர் என்று வரையறுக்கப்படுகிறார். அவரது நடவடிக்கை லாப நோக்கத்தில் செய்யப்பட்டாலும் சரி, இலாப நோக்கம் இன்று செய்யப்பட்டாலும் சரி, வரி வசூலித்துக் கட்ட வேண்டியது அவர் பொறுப்பு. கூடவே எந்த ஒரு நடவடிக்கையையும் சேவை என்று அறிவிக்க அரசாங்கத்துக்கு உரிமை இருக்கிறது”

முதலாளிகளுக்கு வரி ஏய்ப்பு செய்யும் தொந்தரவு ஏற்பட்டு விடக் கூடாதே என்ற நல்ல நோக்கத்தில் இந்த சுமையை ஏற்றுக் கொள்வதுதான் தேசப் பற்றுள்ள குடிமகனுக்கு அழகு!

தற்போதைக்கு விலக்கு அளிக்கப்படப் போவதாக சொல்லப்பட்டுள்ள சேவைகள், இந்த பட்டியலில் சில நீக்கப்படலாம். ஒவ்வொன்றையும் கவனமாக படித்துப் பார்த்து விடுங்கள். இதில் இல்லாத எந்த ஒரு சேவைக்கும் பணம் வாங்கினால் சேவை வரி கட்ட வேண்டிய பொறுப்பு உங்களுக்கு வந்து விடும்.


1. அரசு, நீதித் துறை, ரிசர்வ் வங்கி மற்றும் அரசு ஆணையங்கள் அளிக்கும் சேவைகள்.

2. அரசு கழகங்களில் நியமிக்கப்படும் தனிநபர்களின் சேவை

3. ஐநா, பன்னாட்டு அமைப்புகள், தூதரகங்கள் அளிக்கும் சேவைகள்.

4. சமூக சேவையில் ஈடுபடும் அரசு சாரா அமைப்புகளின் சேவைகள்.

5. இறுதி ஊர்வலம், புதைத்தல், எரித்தல், சவ அறை சேவைகள்

6. விவசாய விளைபொருட்கள், தோட்டப் பயிர்கள், கால்நடை வளர்ப்பு, காடு வளர்ப்பு, பால் துறை, கோழி வளர்ப்பு போன்றவற்றுக்கு நேரடியாக அளிக்கப்படும் சேவைகள்.

7. கடன் பத்திரங்கள் விற்பதும் வாங்குவதும் (நேரடி விற்பனை மட்டும்)

8. வட்டி

9. முதலீடுகளுக்கான ஈவுத் தொகை

10. வங்கிகளுக்கிடையே அன்னியச் செலாவணி பரிவர்த்தனைகள்

11. பொது போக்குவரத்து மூலமாக மக்களை அழைத்துச் செல்லும் சேவை

12. வெளிநாடுகளுக்கு பொருட்களை அனுப்பும் சேவை

13. பொருட்களை அனுப்பும் தொழிலில் ஈடுபட்டுள்ளுவருக்கு வண்டி ஓட்டும் சேவை

14. சாலைகள், விமான நிலையங்கள், ரயில்வே, போக்குவரத்து முனையங்கள் போன்றவை, அரசு கட்டிடங்கள் கட்டுதல், ஒற்றை வீடு கட்டிக் கொடுத்தல், அனாதை விடுதிகள் கட்டுதல் போன்ற சேவைகள்.

15. குடியிருப்புக்காக வீடு வாடகைக்கு விடுதல் (குறிப்பிட்ட அளவுக்குக் கீழ் மட்டும்)

16. பள்ளி கல்வி (நன்கொடைகள் சேர்த்தியில்லை)

17. 4 கோடிக்குக் குறைவாக முந்தைய ஆண்டு வருமானம் கொண்ட கிளினிக், மருத்துவமனை, உடல்நலம் பேணும் சேவைகள்.

18. காப்புரிமை சேவைகள்.

19. தன்னிச்சையாக செயல்படும் பத்திரிகையாளர்கள் வழங்கும் சேவைகள்.

20. விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் அளிக்கும் சேவைகள்.

21. மத ரீதியான சேவைகள்

22. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அளிக்கும் சேவைகள்

23. தொழிற்சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு வழங்கும் சேவைகள்

24. வக்கீல்கள் தனி நபர்களுக்கு வழங்கும் சேவை

25. தேசிய அல்லது பன்னாட்டு விருதுகள் வழங்குதல்

26. கட்டணங்கள்

27. பெட் கட்டுதல் சூதாடுதல் தொடர்பான சேவைகள்.

சேவை விலக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த பட்டியலைப் பார்க்கும்போது இதிலும், வங்கிகள், அரசு, நீதிமன்றம், அரசியல் கட்சிகள், முதலாளிகள் முதலானோருக்குத்தான் ஆதாயம் அதிகம். மக்களைப் பொறுத்த வரை பேருந்தில் ஏறி, கருமாதிக்கு போனால் மட்டுமே சேவை வரி இல்லை என்பதாக இருக்கிறது இந்த பட்டியல்.