WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

வியாழன், 20 செப்டம்பர், 2012

மாமனிதர்


மாமனிதர்

எழுதியவர்/பதிந்தவர்/உரை
வரலாற்றை புரட்டிப்பார்த்தால் எத்தனையோ தலைவர்களும் அறிஞர்களும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக ஒரு இறைத்தூதராகத்தான் இருக்கவேண்டும் என்று அவரின் வாழ்க்கையை படித்து தன் கருத்துகளை தெரிவித்துள்ளார்கள்.
இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்?
- வாஷிங்டன் இர்விங் –

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

இஸ்லாம் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமானதா?



வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்...

இறைவனை நேசிக்கின்ற அவன் ஒருவனையே வணங்கி வழிபட்டு, அவனது அன்பையும் அருளையும் பெற ஆசைப்படுகின்ற இவ்வுலக வாழ்க்கையை,  உண்மையான இறைவனின் விருப்பத்திற்கேற்ப அமைத்துக்கொண்டு மரணத்திற்கு பின் நிரந்தர சொர்க்க வாழ்வை அடைய விரும்பும் நாம் ஒவ்வொருவரும் அதே ஆதமுடைய பிள்ளைகளான ஒரு இறைவனை
பற்றிய செய்தி அறியாத மக்களை பற்றி நாம் நினைத்ததுண்டா???
  • இந்த இஸ்லாமிய மார்க்கம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தம் ஆனதா???
  • குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் இறக்கப்பட்டதா??? 
  •  நாம் உண்டு, நம் வேலை உண்டு என ஒரு முஸ்லிம் இருக்கலாமா???
  • இறுதி தூதரை மாற்று மதத்தவர்களுக்கு அறிமுகப்படுத்தினோமா???
இல்லை....இல்லை...இல்லவே இல்லை.....

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

குகைவாசிகள் – அற்புத வரலாறு


குகைவாசிகள் – அற்புத வரலாறு

எழுதியவர்/பதிந்தவர்/உரை
இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம் சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1433 ஹி
சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தஃவா நிலையம்)
நாள்: 06-09-2012 (19-10-1433-ஹி)
ஒளிப்பதிவு: அல்-ஜுபைல் மாநகர அழைப்புப்பணி உதவியாளர் குழுமம்
வீடியோ எடிட்டிங்: தென்காசி SA ஸித்திக்

Download mp4 HD video 795 MB

.islamkalvi. thanks

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

பெண்களுக்கு பாதி சொத்து- இது நியாயமா???


பெண்களுக்கு பாதி சொத்து- இது நியாயமா???


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

பொதுவாக எல்லா இடங்களிலும் சொல்லப் படும் ஒரு குற்றச்சாட்டு, இஸ்லாத்தில் பெண்கள் எல்லா விசயத்திலும் பார பட்சமாக நடத்த படுகிறார்கள் என்றும்..! அதிலும் முக்கியமாக சொத்து விசயத்தில் மிக அதிகமாகவே அவர்களுக்கு பாரபட்சம் காட்ட படுகிறது  என்பதாகும்.! மேலும் அநேக  விசயங்களில் ஆண்களை விட பெண்களுக்கு குறைவான உரிமைகள் தான் வழங்கப் படுகிறது என்றும் பரவலாக  சொல்ல படுகிறது..உண்மையில் அப்படித் தான் நம் மார்க்கத்தில், நமக்கு சொல்ல பட்டிருக்கிறதா, என்பதை பார்ப்போம்..!

திங்கள், 3 செப்டம்பர், 2012

பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு?





"தற்போது (சில) சகோதரர்கள் தங்கள் மனைவியின் புகைப்படங்களை 'பேஸ்புக் போன்ற இணையதளங்களில் இணைத்துள்ளார்கள் சகோதரர்கள் சிந்திக்க வேண்டாமா 

அந்நிய ஆண்கள் தங்கள் மனைவியை பார்ப்பது தான் இஸ்லாம் கூறுவதா? அந்நிய ஆண்கள் தங்கள் மனைவியை எந்த கோணத்தில் பார்ப்பார்கள் என்பதை சிந்திக்க வேண்டாமா?‘‘

மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு




மனைவியின் மார்பில் கணவன் வாய் வைத்து பால் குடித்தால் மனைவியின் பால் கணவனின் வயிற்றுக்குள் சென்று விடுவதால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடுமோ என்பது பெருவாரியான முஸ்லிம்களுக்கு உள்ள சந்தேகம். உணர்ச்சி மேலீட்டால் அந்த காரியத்தை செய்து விட்டு பிறகு என்ன செய்வதென்று வழி தெரியாமல் தவிக்கும் முஸ்லிம்கள் அனேகம் பேர். சிலர் இது பற்றி மார்க்க தீர்ப்பு பெறுவதற்காக அரபு மதரஸாக்களை நாடுகிறார்கள். மதரஸாக்கள் பெரும்பாலும் மத்ஹபை சரிகண்டுக் கொண்டு இருப்பதால் நேரடியாக குர்ஆன் சுன்னாவைப் பார்த்து பதிலளிக்காமல் எடுத்தவுடன் ‘ஆம் கணவன் மனைவி என்ற உறவு விலகி தாய் மகன் என்ற உறவு ஏற்பட்டு விடும்’ என்று ஃபத்வா கொடுத்து விடுகிறார்கள். இத்தகைய ஃபத்வாக்களால் மார்க்க தீர்ப்பு கேட்ட சிலரது வாழ்க்கை பாழ்பட்டு போய் விட்டதை யாரும் மறுக்க முடியாது.

சனி, 18 ஆகஸ்ட், 2012

திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்?



எல்லாம் வல்ல இறைவன் படைத்த இந்த உலகத்தில் அனைத்தும் அற்புதங்கள். அவற்றில் ஒன்று நம் மனித இனம். நம் மனித இனத்தில் ஆண் பெண் என்று இரு பாலராக இறைவன் படைத்து அவற்றுள் இரத்த பந்தங்கள், சொந்தங்கள் என்று பல பந்தங்களை ஏற்படுத்தி நம்மை இணைத்து இருப்பது மிகவும் அற்புதமான மற்றும் ஆறுதலான விஷயம்.

இப்படிப்பட்ட பந்தத்தில் கணவன் - மனைவி என்ற உறவு இருக்கிறதே சுபஹானல்லாஹ்!!! எவ்வளவு ஒரு அழகிய உறவானதாக இறைவன் நமக்களித்துள்ளான். இந்த அழகிய பந்தத்தை நிக்காஹ் என்ற கடுமையான திருமண ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படுத்திக் கொள்கிறோம்.

இஸ்லாத்தில் திருமணம் என்பது ஒவ்வொருவருக்கும் கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது என்பதை பின்பவரும் ஹதீஸ் வலியுறுத்துகிறது.