WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

வியாழன், 6 டிசம்பர், 2012

எல்லாப்புகழும் இறைவனுக்கே





அல்ஹம்துலில்லாஹ்!பிறவிப்பயனை அடைந்த பெரும் சந்தோஷத்துடன் இவ்விடுகையை தட்டச்சு செய்யும் வாய்ப்பினை அருளிய வல்ல இறைவனுக்கு நன்றி கூறியவளாக தொடர்கிறேன்.


உலகின் நடுமத்தியில் அமையப்பெற்ற,உலகின் மையப்புள்ளியான இறைவனும்,இறைத்தூதர்களும்,இறுதித்தூதரும் ,அவர்களைப்பின் பற்றிய சஹாபாக்களும்,அன்றும்,இன்றும் என்றும் பின் தொடரும் உம்மத்துக்களும் கண்ணியப்படுத்திய கண்ணியப்படுத்திக்கொண்டுள்ள,கண்ணியப்படுத்தப்போகின்ற  மாபெரும் வரலாற்று சின்னத்தை,இறை இல்லத்தினை இது நாள் வரை புகைப்படங்களிலும்,தொலைக்காட்சியிலும் கண்டு வநத நான் நேரில் கணட பொழுது அதன் பேரழகிலும், பிருமாண்டத்திலும்,வசீகரத்திலும்,மெய்சிலிரிக்க வைத்த அந்த தருணத்தை இந்நொடிகூட என்னால் மறக்க இயலவில்லை.

புனித கஃபாவை பார்த்த முதல் நொடி முதல்,இறுதியாக பார்த்த நொடி வரை என் கண்கள் சிந்திய கண்ணீரை அளவிட இயலாது.இது அனைத்து ஹஜ்ஜாளிகளுக்கும் பொருந்தும்.

ஹஜ் சென்று திரும்பிய நாள் முதல் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் மக்கா லைவ் பார்த்த்து மீண்டும் இந்த வாய்ப்பு எப்போது வரும் என்று இப்போதே தவம் இருக்க ஆரம்பித்து விட்டேன்.இது எனக்கு மட்டும் உண்டான உணர்வு அல்ல.ஹஜ்ஜாளிகள் ஒவ்வொருக்கும் இருக்கும்  உணர்வு இது.

மட்டுமின்றி வரலாற்று சிற‌ப்புமிகு தளங்கள்,மதினாவில் இருக்கும் மஸ்ஜிதுன்னபவி எனும் இறைத்தூதரின் தளம்,புனித நகரங்களை சுற்றி உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மலைகள்,அரபா மைதானம்,நக‌ரை சுற்றி உள்ள பாரம்பரியமான மசூதிகள் இப்படி ஒவ்வொன்றையும் கண்களால் கண்டு நெஞ்சம் முழுக்க நிரப்பிக்கொண்டு வந்த நிறைவு என் மனம் முழுக்க நிரம்பி உள்ளது.

பின்னூட்டம் வாயிலாகவும்,மின்னஞ்சல்,தொலைபேசி வாயிலாகவும் என் ஹஜ்  அனுபவத்தையும், பதிவின் வாயிலாக அறிய காத்திருக்கும் நட்புக்களுக்காக இனி வெளிவரும் ஓரிரு இடுகைகள் என் ஹஜ் அனுபவங்களையும்,புனித ஹரம் ஷ‌ரீஃபில் நடந்த ஒரு மினி பதிவர் சந்திப்பை பற்றியும், எழுத்துக்கள் மூலமாகவும்,புகைப்படங்கள் மூலமாகவும் பகிர உள்ளேன்.










லட்சோபலட்ச‌ மக்களுடன் நெருக்கியடித்து கஃபதுல்லாஹ்வை தாவப்(வலம்) செய்த நான் ,மக்கா நகரை பிரிய இருக்கும் நாளன்று வெகு சுலபமாக வலம் வந்த பொழுது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவு இல்லை.மேலுள்ள படத்திலும் கீழுள்ள படங்களிலும் உள்ள மக்கள் வெள்ளத்தின் வித்தியாசத்தினை பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக