WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

திங்கள், 12 டிசம்பர், 2011

ஜெயலலிதாவின் பரிந்துரையுடன் தமிழகத்தின் புதிய அமைச்சர்களாக வளர்மதி, ஆனந்தன் பதவியேற்பு.


ஜெயலலிதாவின் பரிந்துரையுடன் தமிழகத்தின் புதிய அமைச்சர்களாக வளர்மதி, ஆனந்தன் பதவியேற்பு.

13 December 2011 No Comment
தமிழகத்தின் புதிய அமைச்சர்களாக வளர்மதி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் நேற்று மாலை பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் ரோசய்யா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழக அமைச்சரவையில் சட்டம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த பரஞ்ஜோதி கடந்த 9ம் தேதி ராஜினாமா செய்தார். அதேநாளில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்த செல்வி ராமஜெயம் முதல்வர் ஜெயலலிதாவால் அதிரடியாக நீக்கப்பட்டார். இவர்களுக்கு பதில் வளர்மதி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகிய 2 எம்எல்ஏக்களை புதிய அமைச்சர்களாக நியமிக்கும்படி கவர்னருக்கு முதல்வர் ஜெயலலிதா பரிந்துரை செய்தார்.
அதன்படி அறிவிக்கப்பட 2 எம்.எல்.ஏ.க்களும் நேற்று மாலை 4.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் அமைச்சர்களாக பதவியேற்பு உறுதிமொழி மற்றும் ரகசியகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இவர்களுக்கு, கவர்னர் ரோசய்யா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா, தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, அமைச்சர்கள், எல்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கவர்னர் மாளிகையில் நடந்த புதிய அமைச்சர் பதவியேற்பு விழா 7 நிமிடங்களில் முடிந்தது. புதிய அமைச்சர்களான வளர்மதி மற்றும் எம்.எஸ்.எம்.ஆனந்தன் இருவரும் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஆசி பெற்று, நேற்று மாலையே தலைமை செயலகம் சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர். முதல்வர் ஜெயலலிதா உள்பட 34 அமைச்சர்கள் கடந்த மே 16ம் தேதி அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட பிறகு நேற்று 4வது முறையாக அதிமுக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மே 23ம் தேதி அமைச்சர் மரியம்பிச்சை சாலை விபத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து ஜூன் 29ம் தேதி முதல் முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு, ராணிப்பேட்டை தொகுதி எம்எல்ஏ முகமது ஜான் புதிய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
2வது முறையாக ஜூலை 3ம் தேதி சட்ட அமைச்சர் இசக்கி சுப்பையா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ செந்தூர்பாண்டியன் புதிய அமைச்சராக பதவியேற்றார். 3வது முறையாக நவம்பர் 4ம் தேதி 6 அமைச்சர்களை ஜெயலலிதா நீக்கினார். அவர்களுக்கு பதில் 6 பேர் நவம்பர் 6ம் தேதி புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். 4வது முறையாக கடந்த 9ம் தேதி 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதில் நேற்று புதிதாக 2 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக