WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

சனி, 6 ஏப்ரல், 2013

இரண்டு சிங்க இளைஞர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றனர்.வீடியோ இணைப்பு.


இரண்டு சிங்க இளைஞர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றனர்.வீடியோ இணைப்பு.




ளைகுடாவில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த இரண்டு பெளத்தமத இளைஞர்கள் புனித இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டனர்.

அவர்களுக்கான கலிமாவை தமிழ் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய வழிகாட்டி மைய சகோதரர்கள் சொல்லிக்கொடுத்தனர்.

செவ்வாய், 26 மார்ச், 2013

இறை வேத அத்தாட்சிகள்!


இறை வேத அத்தாட்சிகள்!

97. ஓரிறைக் கோட்பாடு


97. ஓரிறைக் கோட்பாடு

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7371
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (நீதி நிர்வாகத்தைக் கவனிக்க) அனுப்பி வைத்தார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7372
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது அவர்களிடம், ‘நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். எனவே, அவர்களுக்கு முதலாவதாக, அல்லாஹ் ஒருவன் எனும் (ஏக இறைக்) கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து (ஏற்றுக்) கொண்டால், தினந்தோறும் ஐந்து நேரத் தொழுகைகளை அவர்களின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அவர்கள் (அதை ஏற்று) தொழவும் செய்தால் அவர்களிடையேயுள்ள செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்குச் செலுத்தப்படுகிற ஸகாத்தை அவர்களின் செல்வங்களில் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அதையும் அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களிடமிருந்து (ஸகாத்தை) வசூலித்துக் கொள்ளுங்கள். (ஆனால்,) மக்களின் செல்வங்களில் சிறந்தவற்றைத் தவிர்த்திடுங்கள்’ என்றார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7373
முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘முஆதே! அடியார்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர்கள் அவனையே வணங்குவதும் அவனுக்கு எதையும் இணைவைக்காமலிருப்பதும் ஆகும். (அவ்வாறு அவர்கள் செய்தால்) அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்க, நான், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர்களை அவன் (மறுமையில்) வேதனைசெய்யாமலிருப்பது தான்’ என்று பதிலளித்தார்கள்.

இஸ்லாமியப் பெண்கள் எப்படிங்க விவாகரத்து செய்ய முடியும்..?


இஸ்லாமியப் பெண்கள் எப்படிங்க விவாகரத்து செய்ய முடியும்..?

    
    திருமணமென்னும் வாழ்க்கை ஒப்பந்தத்துடன் வாழ்விலே சங்கமிக்கும் ஓர் ஆணும் பெண்ணும், பரஸ்பரம் நேசித்து.. இன்பங்களைப் பகிர்ந்து.. துன்பங்களில் பங்கெடுத்து.. துயர‌ங்களில் தோள் கொடுத்து, ஓருயிர் ஈருடலாய் ஒருமித்து வாழ்வதே இனிய இல்வாழ்க்கையாகும். இரத்த பந்தமில்லா ஓர் அந்நியம்.. திருமண பந்தத்தின் மூலம் அந்நியோன்யமாகி, மற்றெல்லா உறவுகளையும் நட்புகளையும்விட நெருக்கமாகி, அந்தரங்க உணர்வுகள் வரை ஊடுருவி இரண்டறக் கலந்துவிடும் கணவன்-மனைவி உறவுதான் சந்தோஷமான குடும்ப சூழ்நிலையின் அஸ்திவாரமாக உள்ளது. ஆனால் அந்த அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடுமானால் அன்பும், மன அமைதியும் நிலவும் வாழ்க்கை என்பது கேள்விக்குறியே! 

இது வேண்டாம்..அது...


இது வேண்டாம்..அது...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

ஒரு சின்ன கேள்வியோடு இந்த இடுகையை தொடங்குகிறேன்....

ஹலால், ஹராம் என்ற புரிதல் நமக்கு எந்த வயதிலிருந்து வந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஹராமான, தடுக்கப்பட்ட உணவு என்று சொன்னாலே பலருக்கு உடனே நினைவுக்கு வருவது பன்றியின் இறைச்சியும், மதுவும் தான். பெரும்பாலான முஸ்லிம்கள் பன்றியின் பெயரைக்கூட உச்சரிக்கமாட்டார்கள், பதிலாக 'நாலு கால்' என்றே கூறுவோம் அல்லவா? அந்தளவுக்கு நமக்கு அல்லாஹ் ஹராமக்கியிருக்கும் அந்த இறைச்சியை நாம் வெறுக்கிறோம், அதை வெளிப்படையாக காட்டவும் செய்கிறோம். இந்த ஒரு விஷயம் மட்டும் சிறு வயதிலிருந்தே எல்லார் மனதிலும் ஆணியடித்தார் போல் பதிந்துவிட்டது அல்லவா?

ஞாயிறு, 24 மார்ச், 2013

ஹலாலான உழைப்பின் சிறப்பு


இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.




தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)

புதன், 20 பிப்ரவரி, 2013

இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,



இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது, கொலைசெய்யபட்டவரின் மகன் பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார், 

குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும் நான் ஒருவருக்கு காசு கொடுக்க வேண்டியுள்ளது அதை திருப்பிகொடுத்துவிட்டு மேலும் என் மகனை என் குடும்பத்தில் யாராவது பொறுப்பானவரிடம் ஒப்படைத்து விட்டு வருகிறேன் என வேண்டுதல் வைக்கிறார்,

ஆனால் தண்டனை வழங்கவேண்டியவர் இல்லை இவர் நம்மை ஏமாற்றிவிட்டு தப்பிக்க பார்க்கிறார் என்கிறார்... இவருக்கு ஒருவர் பொறுப்பேற்றுகொண்டால் நான் இவர் போய்வர சம்மதிக்கிறேன் என்கிறார்...

உடனே அபுதர் (ரலி) அவருக்கு தான் பொறுப்பு ஏற்பதாக சொல்கிறார் அப்போது உமர் அவர் ஏமாற்றி சென்றால் நீங்கள் தண்டனையை ஏற்கவேண்டும் நன்கு யோசித்துகொள்ளுங்கள் என அபுதரிடம் சொல்கிறார்... அபுதரும் தான் ஏற்றுகொள்வதாக சொல்கிறார்...

தண்டனைக்குரிய நபருக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கபடுகிறது மூன்றாவது நாள் அசர் தொழுகைக்கு முன் வந்துவிடவேண்டும் என்ற நிபந்தனையோடு விடப்படுகிறார்... 

இரண்டு நாட்கள் ஓடியது மூன்றாவது நாள் வந்தது அசர் தொழுகை நடைபெற்றது எல்லோரும் தண்டனையை நிறைவேற்ற ஆயத்தமாகிய நிலையில் குறிப்பிட்ட நபருக்காக காத்திருக்கின்றனர்... 

நேரம் செல்ல செல்ல மக்கள் மத்தியில் சலசலப்பு... தூரத்தில் ஒரு குதிரை மிகவும் வேகமாக வருகிறது... தண்டனைக்குரிய நபர் தான் வருகிறார்... வந்துவிட்டார்.... உமர் அவரிடம் நீர் ஏன் திரும்ப வந்தீர்...??? 
என கேட்கிறார் 

அதற்கு அவர் முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவர் தண்டனைக்கு அஞ்சி தலைமறைவு ஆகிவிட்டார் என்று நாளை வரலாறு என்னை பழிக்கும் மேலும் இங்கே தப்பிவிடலாம் நாளை அல்லாஹ்விடம் இதைவிட கொடிய வேதனை கிடைக்கும் என நான் அஞ்சுகிறேன் என்றார்... 

அடுத்து அபு தர்ரிடம் நீங்கள் என்ன தைரியத்தில் அவருக்கு பொறுப்பு ஏற்றீர்கள்..?? என்று கேட்டார் உமர்... 

உடனே அபூதர் ,முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவருக்கு பொறுப்பேற்க யாருமே இல்லை என்ற நிலை வந்துவிடுமோ என அஞ்சினேன் அதனால் தான் அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பேற்றேன் என்றார்... 

பின்னர் உமர் சரி தண்டனையை நிறைவேற்றலாம் என்றதும்... 

வழக்குறைத்தவர்...

நான் அவரை மன்னித்துவிடுகிறேன் அவரை விட்டுவிடுங்கள்... முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவர் மன்னிக்கும் மனப்பான்மை இல்லாதவராக இருந்தார் என்ற பழி என்மீது வருவதை நான் விரும்பவில்லை என்றார்...

இத்தகைய நல்ல மனிதர்களுக்கு என்னை ஜனாதிபதியாக்கிய அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும் என கண்ணீர் மல்க கூறினார் உமர் ரலி - நம்பிக்கையாளர்களின் தலைவர்...

நன்றி : அபு ரையான்
இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது, கொலைசெய்யபட்டவரின் மகன் பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார்,

குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும் நான் ஒருவருக்கு காசு கொடுக்க வேண்டியுள்ளது அதை திருப்பிகொடுத்துவிட்டு மேலும் என் மகனை என் குடும்பத்தில் யாராவது பொறுப்பானவரிடம் ஒப்படைத்து விட்டு வருகிறேன் என வேண்டுதல் வைக்கிறார்,